Published : 20 Nov 2022 08:48 AM
Last Updated : 20 Nov 2022 08:48 AM
‘நீங்கள் எல்லா மலர்களையும் கொய்து விடலாம், ஆனால், வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது’ என்றார் பாப்லோ நெருடா. அதுபோன்றதுதான் கேரளத்தைச் சேர்ந்த தாவரவியலாளர் ஈ.கே.ஜானகி அம்மாளின் புகழும். அவர் மறைந்துவிட்டாலும் ஒவ்வொரு வசந்தத்திலும் மலரும் மலர்கள் அவரை நினைவுகூர்கின்றன. ஆனால், தான் வாழும் காலத்தில் மட்டுமல்ல; அதற்குப் பிறகும் அவ்வளவாகக் கொண்டாடப்படாதவர் ஜானகி அம்மாள்.
தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சர்ரே கவுண்டியின் வீதிகளில் நவம்பர் மாதம் முழுவதும் பூத்துக் குலுங்கும் இளஞ்சிவப்பு மலர்கள் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவை என்பது வெகுசிலருக்கே தெரியும். ஜானகி அம்மாள், தன் 60 ஆண்டு கால தாவரவியல் ஆராய்ச்சியின்போது இங்கிலாந்தில் நட்டுவைத்த மலர்கள் இன்றைக்கும் பூத்துக்குலுங்குகின்றன. ஆயிரக்கணக்கான பூக்கும் தாவர வகைகளின் குரோமோசோம்கள் குறித்து இவர் ஆராய்ந்துள்ளார். தாவரவியல் துறையில் ஜானகியின் பங்களிப்பைப் பெருமிதப்படுத்தும் வகையில் வெள்ளை நிறத்தில் மலர்ந்து சிரிக்கும் மலருக்கு இவரது பெயரை (Magnolia Kobus Janaki Ammal) வைத்துள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!