Published : 15 Nov 2022 06:38 AM
Last Updated : 15 Nov 2022 06:38 AM

ப்ரீமியம்
முனைவர் படிப்புக்குப் புதிய விதிமுறைகள்

ஹுசைன்

முனைவர் பட்டம் (Phd) பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறையில் பணியில் இருக்கும் பட்டதாரிகளுக்காக, பகுதிநேர முனைவர் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மதிப்பெண்களில் 5 சதவீதத் தளர்வும் அளிக்கப்படுகிறது. 2016இல் அறிவிக்கப்பட்ட விதிகளுக்குப் பதிலாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள்:

புதிய விதிமுறைகள்: முதலாவதாக, சேர்க்கைக்கான தகுதி அளவுகோல்கள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, நான்கு ஆண்டு/எட்டு செமஸ்டர் இளங்கலை திட்டப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான படிப்புத்தரம் பெற்றவர்கள் முனைவர் பட்டத்துக்குத் தகுதியுடையவர்கள். இருப்பினும், நான்கு ஆண்டு இளங்கலை பட்டப் படிப்புக்குப் பின்னர் முனைவர் படிப்பில் இணைய விரும்புவோர் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மூன்று ஆண்டு இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தோர், முனைவர் படிப்பில் இணைய இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். முன்பு பல பல்கலைக்கழகங்கள் முனைவர் படிப்புக்கு எம்.பில்., படிப்பையும் வலியுறுத்தின. தற்போது எம்.பில்., படிப்பின் தேவை நீக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x