Last Updated : 01 Nov, 2022 06:35 AM

 

Published : 01 Nov 2022 06:35 AM
Last Updated : 01 Nov 2022 06:35 AM

சேதி தெரியுமா?

அக்.17: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்.18: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கைகள் தமிழகச் சட்டப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டன.

அக்.18: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி போட்டியின்றித் தேர்வானார்.

அக்.19: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்.23: இங்கிலாந்தின் 36 செயற்கைக்கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட்டை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

அக்.25: இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் ராஜிநாமா செய்ததையடுத்து புதிய பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார்.

அக்.26: கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.

அக்.26: இந்தியப் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) செயல் தலைவராக சங்கீதா வர்மாவை மத்திய அரசு நியமித்தது.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x