Published : 01 Nov 2022 06:43 AM
Last Updated : 01 Nov 2022 06:43 AM

ப்ரீமியம்
இசையால் மயக்கும் இளைய தலைமுறை!

‘ஆன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை’ இசைக்குழு

நேரலை இசை நிகழ்ச்சிகளுக்கும் சுயாதீன இசைக்கலைஞர்களுக்கும் எந்த ஊரிலும் இல்லாத வரவேற்பு சென்னையில் இருக்கிறது. மொட்டை மாடி தொடங்கி பாண்டி பஜார் வரை எந்த இடமானாலும் சென்னையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கெனெத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், புதுப்புது முயற்சிகளால் மக்களையும் இசையையும் ஒன்றிணைத்த இசைக்குழுக்கள், சுயாதீன இசைக்கலைஞர்கள் சிலரிடம் பேசினோம்.

மொட்டை மாடி மியூசிக்: “பாடத் தெரிந்தவர்கள், இசையை ரசிப் பவர்கள், இசைக் கருவி வாசிப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் எங்க வீட்டு மொட்டை மாடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்” என ‘மொட்டை மாடி மியூசிக் குழு’வை நிர்வகிக்கும் பத்ரி, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவுக்கு அமோக வரவேற்பு. நண்பர்கள், அக்கம்பக்கதினர் எனக் கூட்டம் கூட மொட்டை மாடி ஜாமிங் நிகழ்ச்சி பிரபலமானது. வழக்கத்துக்கு மாறாக இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துமாறு இசைக் குழுவுக்கு மக்கள் கோரிக்கை விடுக்க, ‘ரஜினி நைட்’, ‘ஏ.ஆர் ரஹ்மான் நைட்’, ‘எம்.எஸ்.வி நைட்’ என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் அமர்க்களப்பட்டன. ‘மொட்டை மாடி’ நிகழ்ச்சி அடுத்து சில மாதங்களில் ‘மாடிட்டோரியம்’ ஆனது. பொதுவாக ஓரிடத்தில் இசைக் கலைஞர்கள், மக்கள் கூடி பாடி மகிழ்வதுதான் இந்த ‘மாடிட்டோரியம்’. இதற்கும் வரவேற்பு கிடைக்க, வீட்டு மொட்டை மாடியில் பாடி வந்த இந்த இசைக்குழு இன்று இந்தியா முழுவதும் பல நகரங்களில் ‘மாடிட்டோரியம்’ நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x