Last Updated : 18 Oct, 2022 06:35 AM

 

Published : 18 Oct 2022 06:35 AM
Last Updated : 18 Oct 2022 06:35 AM

சேதி தெரியுமா?

அக்.7: தமிழகத்தில் இணையவழி சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கினார்.

அக்.8: இந்திய விமானப் படையில் (ஐஏஎஃப்) வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக ஆயுத அமைப்புகள் (டபிள்யூஎஸ்) என்கிற புதிய கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அக்.9: மதம் மாறிய பட்டியலித்தனவருக்கு ‘எஸ்.சி.,’ அந்தஸ்து வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் மூவர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.

அக்.12: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டைத் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரைத்தார். லலித் நவ.8 இல் ஓய்வு பெறுகிறார்.

அக்.13: கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கியது.

அக்.13: நாட்டின் முதல் தேவாங்கு சரணா லயத்தைத் தமிழகத்தின் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது.

அக்.14: ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இந்திய வட்டெறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுருக்கு மூன்று ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகத் தடகள ஒருமைப்பாடு பிரிவு (Athletics Integrity Unit) அறிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x