Published : 12 Oct 2022 06:42 AM
Last Updated : 12 Oct 2022 06:42 AM

ப்ரீமியம்
பிலிப்பைன்ஸ் நாட்டுக் கதை: வானுக்கும் கடலுக்கும் போர்

தமிழில்: சூ.ம.ஜெயசீலன்

உலகம் உருவானபோது வானம், கடல், ஒரே ஒரு கறுப்புப் பறவை ஆகியவை மட்டுமே இருந்தன. நிலம் உருவாகாததால் தொடர்ந்து வானில் பறப்பதைத் தவிர பறவைக்கு வேறு வழி இல்லை. ஓய்வே இல்லாமல் பறந்ததால் பறவையின் இறக்கைகள் களைப்படைந்தன. ஒரு மதிய நேரத்தில் பறவையால் தன் இறக்கைகளை விரிக்க முடியவில்லை. ஓய்வெடுப்பதற்கு இடம் ஏதும் இல்லை. பறவைக்குக் கீழே பெருங்கடல் மட்டுமே இருந்தது.

இன்னும் சில நாள்கள் மட்டுமே தான் உயிரோடு இருக்க முடியும் என்பதைப் பறவை உணர்ந்தே இருந்தது. அதற்குள் களைத்துப்போன தன் இறக்கைகளுக்கு ஓய்வளிக்கும் வழியை அது கண்டுபிடிக்க வேண்டும். அந்தக் காலத்தில் வானம் மிகவும் கீழே, ஏறக்குறைய கடலைத் தொட்டுக்கொண்டிருந்தது. கடலையும் வானத்தையும் பயன்படுத்தி, ஓய்வெடுப்பதற்கான இடத்தை எப்படி உருவாக்குவது என்று பறவை யோசித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x