Published : 31 Jul 2022 09:46 AM
Last Updated : 31 Jul 2022 09:46 AM

ப்ரீமியம்
பேசு பெண்ணே - 9 | கொஞ்சமாவது அக்கறையோடு இருக்கிறோமா?

ஜெ.தீபலட்சுமி

அண்மையில் நண்பர் ஒருவரின் தாய் சிறுநீரகச் செயலிழப்பால் உயிரிழந்தது பேரதிர்ச்சியை அளித்தது. “அம்மா சின்ன தலைவலி என்றுகூடப் படுத்ததில்லை” என்று சொல்வார். நாங்களும் அவரைப் பார்த்திருக்கிறோம். எப்போதும் இன்முகத்துடன் சுறுசுறுப்பாக வளையவருவார். எழுபது வயதிலும் அரை மணியில் பத்து பேருக்குச் சமைத்துப்போடக் கூடியவர். கண்ணாடி அணியாதவர், மருத்துவமனை பக்கம் தலைவைத்துப் படுக்காதவர், ஐந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க அவர் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அவருக்குச் சிறுநீரகத்தில் எப்படிக் கோளாறு ஏற்பட்டுச் செயலிழப்பு நடந்திருக்கும் என்ற எங்கள் கேள்விக்கு அவரது மருத்துவமனை ஆய்வறிக்கைகள் கொடூரமான விடைகளைத் தந்தன. லேசான தலைவலி, பல்வலி, உடல்வலி என்று எது வந்தாலும் கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை அள்ளி அள்ளி விழுங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்பவர், தனக்கு மட்டும் இப்படிக் குறுக்கு வழிகளையே நாடியிருக்கிறார். வலி நிவாரணி மாத்திரைகளில் உள்ள நச்சு வேதிப் பொருட்கள் சிறுநீரகங்களைத் தாக்கிச் செயலிழக்க வைத்ததில் உயிரிழந்து விட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x