Last Updated : 04 Jul, 2022 03:58 PM

 

Published : 04 Jul 2022 03:58 PM
Last Updated : 04 Jul 2022 03:58 PM

ப்ரீமியம்
குடியரசுத் தலைவர் தேர்தல் 1982 டைரி: ஒரு சீக்கியர் குடியரசுத் தலைவரான கதை!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 முதல் 1977 வரை காங்கிரஸ் கட்சி நிறுத்திய வேட்பாளர்கள்தாம் குடியரசுத் தலைவர்களாக முடிந்தது. ஆனால், ஒரு மாற்றமாக ஜனதா கட்சியைச் சேர்ந்த நீலம் சஞ்சீவ ரெட்டி 1977 - 1982 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவரும் முன்னாள் காங்கிரஸ்காரர்தான். ஆனால், இந்திரா காந்திக்கு இவரை ஏனோ பிடிக்காமல் போனது.

நிற்க, 1982 குடியரசுத் தலைவர் தேர்தல் வருவதற்கு முன்பே 1980 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று இந்திரா காந்தி பிரதமராகியிருந்தார் (அவருக்கு நீலம் சஞ்சீவ ரெட்டிதான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்). இந்தத் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்தான் வெற்றிபெற முடியும் என்கிற அளவுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் அதிகம் இருந்தனர். தேர்தல் நெருங்கியபோது, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்கிற யோசனையில் இந்திரா காந்தி மூழ்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x