Published : 01 Jul 2022 01:46 PM
Last Updated : 01 Jul 2022 01:46 PM

ரகசிய செய்தி - மேஜிக் - ஜி. சுரேஷ்

உங்கள் நண்பர்களுக்கு ஒரு செய்தியை ரகசியமாக அனுப்ப வேண்டும். அது வேறு யார் கண்களுக்கும் தெரிந்துவிடக் கூடாது. எப்படி அனுப்பலாம்?

இரண்டு வெள்ளைக் காகிதங்கள், பென்சில், முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

எப்படிச் செய்வது?


* ஒரு வெள்ளைக் காகிதத்தை நன்றாகத் தண்ணீரில் நனைத்து, எடுங்கள்.
* முகம் பார்க்கும் கண்ணாடியில் அந்தக் காகிதத்தை ஒட்டுங்கள். ஈரமாக இருப்பதால் காகிதம் ஒட்டிக்கொள்ளும்.
* இன்னொரு வெள்ளைக் காகிதத்தை ஏற்கெனவே கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஈரக் காகிதத்தின் மீது ஒட்டுங்கள்.
* பென்சில் மூலம் நீங்கள் நினைத்ததை எழுதுங்கள்.
* மேலே இருக்கும் காகிதத்தை எடுத்துவிடுங்கள். இனி அது தேவையில்லை.
* கண்ணாடியில் ஒட்டியிருக்கும் காகிதத்தை காற்றில் நன்றாகக் காயவிடுங்கள்.
* நீங்கள் எழுதிய எழுத்துகள் அந்தக் காகிதத்தில் ஈரப்பதம் உள்ள வரை கண்களுக்குத் தெரியும். காகிதம் உலர உலர எழுத்துகள் மறைய ஆரம்பிக்கும்.
* காகிதம் முழுவதுமாகக் காய்ந்து, பழைய நிலைக்கு வரும்.
* காகிதத்தை உங்கள் நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்! எழுத்துகளே இல்லாத வெள்ளைக் காகிதத்தில் என்ன படிக்க முடியும் என்று கேட்பார்கள்.
* காகிதத்தின் மேல் சிறிது தண்ணீரைத் தெளிக்கச் சொல்லுங்கள்.
* தண்ணீர் தெளித்தவுடன் எழுத்துகள் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள். இந்த எளிய மேஜிக்கைச் செய்து, உங்கள் நண்பர்களை அசத்துங்கள்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x