Last Updated : 24 Jun, 2022 04:25 PM

 

Published : 24 Jun 2022 04:25 PM
Last Updated : 24 Jun 2022 04:25 PM

ப்ரீமியம்
அந்தக் கால ஏ.ஆர்.ஆர். பாடிய இந்தப் பாடலை இப்படியும் பாட முடியுமா?

‘பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னகதின் பஜன்கரே...’. பெங்களூர் ரமணியம்மாள் பாடிப் பிரபலப்படுத்திய இந்தப் பாடலின் பின்னணியில் அவருடைய கணீர்க் குரலுக்குத் தோதாக அசுர வாத்தியமான நாதசுரம் தவிலைப் பயன்படுத்தியிருப்பார்கள். பெங்களூர் ரமணியம்மாளின் கணீர்க் குரலில் இந்தப் பாடலைக் கேட்டவர்களுக்குப் பக்திப் பரவசத்தை அளித்தது என்றால், பின்னாளில் இதே பாடலை எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் கேட்டது வேறொரு புதிய அனுபவத்தைத் தந்தது.

நம்முடைய இசை மரபில் வெண்கலக் குரல் என்று மெச்சும் ஒருசிலரைப் பட்டியல் போட்டால், அதில் நிச்சயம் இடம்பெறும் பெயர் பெங்களூர் ஏ.ஆர்.ரமணியம்மாள். இவர் பாடிய காவடிப் பாடல்களுக்கு தைப்பூச திருவிழாக்களில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். இவர் பாடிய சம்ஸ்கிருத கணபதி துதிப் பாடல் மிகவும் பிரசித்தமானது.

அந்தப் பாடலை தலைமுறைகளைத் தாண்டி வயலின் மேதை எல்.சுப்ரமணியத்தின் மகள் பிந்து சுப்ரமணியம் குரலில் கேட்பது புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது. நாகசுவரத்திலும், புல்லாங்குழல் இசைப் பின்னணியிலும் கேட்ட இந்தப் பாடல், தற்போது நவீன வாத்தியக் கலவையான இசையோடு தற்போது ஒலிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x