Published : 15 Jun 2022 02:47 PM
Last Updated : 15 Jun 2022 02:47 PM
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள் என ஐரோப்பியர்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவுக்குக் கடல்வழியே ‘வணிகப் படையெடுப்’பை நடத்தினர். இவர்கள் அனைவருமே கிழக்குக் கடற்கரைச் சாலையில் தங்கள் பார்வையைக் குவித்தனர். எனவே, இந்தக் கடற்கரையில் ஐரோப்பியர்கள் அமைத்த கோட்டைகள், நினைவுச்சின்னங்கள், கட்டிடங்கள் ஏராளம். அவற்றில் பல இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. சில நினைவுகளைச் சுமந்தபடி எச்சங்களாகக் காட்சியளிக்கின்றன. அவற்றில் பழவேற்காடு கோட்டையைச் சற்று அசைபோடுவோம்.
சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் வழியில் பழவேற்காட்டில் (புலிகாட்) கோட்டை இருந்தது என்றால், அதை நம்புவது சற்றுக் கடினம்தான். ஆனால், வங்கக் கடலில் கழிமுகப் பகுதியாக விளங்கும் பழவேற்காடு வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. போர்த்துக்கீசியர்கள் கி.பி. 1502ஆம் ஆண்டில் விஜயநகர ஆட்சியாளர்களின் உதவியால் வங்கக் கடற்கரையோரத்தில் உள்ள பழவேற்காடு ஏரிக்கரையில் ஒரு வர்த்தக மையத்தை அமைத்தனர். அதைச் சுற்றி சிறிய அளவிலான கோட்டையையும் எழுப்பினர். பின்னர், இக்கோட்டை டச்சுக்காரர்களால் கி.பி. 1609இல் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் கி.பி. 1613ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி, அந்த இடத்தில் வலுவான கோட்டையைக் கட்டியெழுப்பியது. அதன் பெயர் ஜெல்டிரியா கோட்டை (Fort Geldria).
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT