Last Updated : 12 Jun, 2022 11:45 AM

 

Published : 12 Jun 2022 11:45 AM
Last Updated : 12 Jun 2022 11:45 AM

ப்ரீமியம்
வசந்தத்தை நிறுத்த முடியாது!

மும்பையின் சமீபத்திய அடையாளமாகி விட்ட கடல் பாலத்துக்கு அருகிலிருக்கும் குடிசைப் பகுதியின் சிறிய வீட்டில் வசித்துவருகிறார் லால்ஸாரி. காதல் கணவருடன் காஷ்மீரிலிருந்து வெளியேறி மும்பையில் வீட்டுவேலை உதவியாளராக இருக்கிறார். அவருடைய கணவர் லுட்ஃபிக்குக் குடியிருப்புக் காவலராகப் பணி. தினசரி காலையில் பழைய ஸ்கூட்டரில் லாலியை வேலைக்கு விட்டுவிட்டு, தன் பணியிடத்துக்கு லுட்ஃபி போவது வழக்கம். லாலியுடனான வாழ்க்கை சலித்துவிட்டதாகக் கூறி, திடீரென்று ஒரு நாள் காலை அவரைக் கைவிட்டுவிட்டு லுட்ஃபி சென்றுவிடுகிறார்.

லாலி இப்போது வேலைக்குச் செல்ல வேண்டுமென்றால், பழைய சைக்கிள் ஒன்று மட்டுமே வழி. ஏற்ற இறக்கங்களில் லாலியால் அந்த சைக்கிளைக் கட்டுப்படுத்தி ஓட்ட முடிவதில்லை. அதிலும் ஒரு பெரிய பாலத்தில் லாலியால் ஏறவே முடிவதில்லை. கைவிட்டுச் சென்ற கணவன், சைக்கிள் பயணத்தைக் கடினமாக்கும் பாலம், உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமில்லாத மும்பை என அனைத்தும் லாலியைத் தனியாளாக்கி மிரட்சி அடைய வைக்கின்றன. இன்றைக்கு நாட்டில் பல பெண்கள் தள்ளப்பட்டுள்ள அதே நிராதரவான நிலைக்குச் செல்கிறார் லாலி. இந்தப் பின்னணியில் அவருடைய ஒற்றை அறை வீட்டின் உத்திரத்திலும் ஓட்டை விழுந்துவிடுகிறது. அதைச் சீரமைக்கக் காசில்லாமல் தார்பாய் போட்டு மூடுகிறார். இருள் கவ்வியதுபோல் ஆகிறது அவருடைய வாழ்க்கை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x