Last Updated : 01 Jun, 2022 04:32 PM

 

Published : 01 Jun 2022 04:32 PM
Last Updated : 01 Jun 2022 04:32 PM

ப்ரீமியம்
20-வது நினைவு நாள்: ஹன்சி குரோனியே - கேப்டன்களின் ராஜா!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஹன்சி குரோனியேவின் மரணச் செய்தியைக் கேட்டபோது கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் துடித்துத்தான் போனர்கள். உலகில் அனைத்து அணிகளின் தூக்கத்தையும் கலைத்தவர் கேப்டன் ஹன்சி குரோனியே. அன்று ஹன்சி குரோனியேவின் கேப்டன்சியை எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுமே ஆராதித்தார்கள். அந்த அளவுக்கு கேப்டன்சியில் ஜொலித்தவர் குரோனியே. குறுகிய காலத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியைக் கட்டமைத்து, தலைசிறந்த அணியாக மாற்றிக் காட்டிய ஹன்சி குரோனியேவின் நினைவு நாள் இன்று.

1960களில் நிறவெறிக் கொள்கையால் உலக நாடுகளிலிருந்து தனித்து விடப்பட்டது தென் ஆப்பிரிக்கா. இதனால் சுமார் 20 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணியால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. தென் ஆப்பிரிக்கா நிறவெறிக் கொள்கையைக் கைவிட்ட பிறகுதான், அது கிரிக்கெட் காற்றையும் சுவாசிக்க முடிந்தது. பிறகு 1991ஆம் ஆண்டில்தான் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியால் அடியெடுத்து வைக்க முடிந்தது. கிளைவ் ரைஸ், கெப்ளர் வெசல்ஸ் ஆகிய இரு கேப்டன்களின் தலைமையில் சுமாரான வெற்றிகளைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு, 1994இல் கேப்டன் ஆனார் ஹன்சி குரோனியே. இவர் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது 24 வயதுதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x