Published : 27 May 2022 08:05 AM
Last Updated : 27 May 2022 08:05 AM

ப்ரீமியம்
தனக்கென வாழாத தாரகை! - டி.ஆர்.ராஜகுமாரி நூற்றாண்டு நிறைவு

மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து, மூன்றுமே படுதோல்வி அடைந்திருந்த நிலையில், நான்காவது படத்தைப் பார்த்த ரசிக மகா ஜனங்கள் அவரைக் ‘கனவுக் கன்னி’ என்றார்கள். நடிக்க வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தபோது அவர் நடித்திருந்த படங்களின் எண்ணிக்கை வெறும் 17 மட்டும்தான். ஆனால், 100 படங்களில் நடித்துவிட்ட உச்ச நட்சத்திரம்போல் அவரைக் கொண்டாடித் தீர்த்தனர். இவர் நடிக்க வந்தபிறகுதான் ‘கதாநாயகிகளுக்கு ‘செக்ஸ் அப்பீல்’ அவசியமா? அநாவசியமா?’ என்று கேட்டு பிரபல சினிமா பத்திரிகையொன்று தன் வாசகர்களிடம் விவாதம் நடத்தியது.

இன்னும் சில சினிமா இதழ்கள், அவரைக் ‘காந்தக் கண்ணழகி’, ‘தந்த பொம்மை’, ‘ஆடும் குயில் பாடும் மயில்’ என்றெல்லாம் வருணித்து அவருடைய ஒளிப்படங்களை அச்சிட்டு வெளியிட்டன. இத்தனை சிறப்புக்கும் பாராட்டுக்கும் உரிய அந்த உச்ச நட்சத்திரம், தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி என்று மெச்சப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி. மே 5ஆம் தேதி 1922இல்தஞ்சாவூரில் பிறந்தவர். அவருடைய நூற்றாண்டை கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். இவருடைய பாட்டி அந்நாளில் பிரபலமான கர்னாடக இசைப் பாடகியாக வலம் வந்த ‘தஞ்சை குசலாம்பாள்’. அவருடைய இரண்டாவது மகளான ரங்கநாயகியின் மகள்தான் ராஜகுமாரி. இவர் திரையுலகில் அறிமுகமாகும் முன்பே இவருடைய ஒன்றுவிட்ட சகோதரிகளான எஸ்.பி.எல்.தனலட்சுமி, டி.எஸ். தமயந்தி ஆகியோர் சினிமாவில் நடித்துப் பெயர் பெற்றிருந்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x