Published : 26 May 2022 07:45 AM
Last Updated : 26 May 2022 07:45 AM
பெரும்பாலான கோயில்களில் உள்ள துவாரபாலகர்கள் கதாயுதத்தின் மீது ஒரு காலை ஊன்றியபடி காட்சிதருவார்கள். ஆனால், இவர் மட்டும் வித்தியாசமாகப் பெரிய திரிசூலத்தின் மீது காலை ஊன்றியபடி காட்சிதருகிறார். இவரது தலையலங்காரம் வித்தியாசமாக உள்ளது. ஜடாமுடியும் சுருள்சுருளாகத் தலைக் கேசமும், அழகிய கிரீடமுமாகக் காணப்படுகிறார். காதுகளில் சிம்மத்தின் உருவம் பதித்த பெரிய குழையை அணிந்துள்ளார். பின்னணியில் சுருண்ட தலைக் கேசமும் அழகாக அணிசெய்கிறது. இடக் காதோரம் ஒரு நாகம் எட்டிப் பார்க்கிறது. மார்பில் அழகிய அணிமணிகள் மற்றவர்களில் இருந்து வேறுபட்டுக் காட்சியளிக்கிறது. தோள்பட்டையில் சிம்மத்தின் உருவம் பதித்த வங்கிகளும், கைகளில் வளையல்களும் அருமையாக உள்ளன. இது சோழர்களின் படைப்பு என்பதை இவை பறைசாற்றுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT