Last Updated : 18 May, 2022 01:01 PM

 

Published : 18 May 2022 01:01 PM
Last Updated : 18 May 2022 01:01 PM

ப்ரீமியம்
இறைவனுக்கு ஒரு தாலாட்டு!

ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே...

திருவருட்பாவின் இரண்டாம் திருமுறையில் ராமலிங்க சுவாமிகள் எழுதியிருக்கும் செய்யுள் இது. கொச்சகக் கலிப்பா என்னும் இலக்கணச் செறிவோடு எழுதப்பட்டிருக்கும் இந்தச் செய்யுளுக்குச் சிறிதும் பதச் சேதம் இல்லாமல் இசையமைத்திருப்பவர் ஒரு பிரபல திரை இசையமைப்பாளர் என்றால் பலருக்கும் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். அந்தத் திரை இசையமைப்பாளர் சி.சத்யா. பாடியிருப்பவர் பிரபல பின்னணிப் பாடகி சைந்தவி. பிரபல திரை இசையமைப்பாளரான பின்பும் மனத்துக்குப் பிடிக்கும் இத்தகைய ஆன்மிகப் பாடல்களுக்கு விரும்பி இசையமைத்து அந்தக் காணொளிகளைத் தன்னுடைய யூடியூப் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருபவர் சி.சத்யா. குறிப்பாக வள்ளலார் அருளிய திருவருட்பா பாடலான இதற்கு இசையமைத்த தருணம் குறித்து நம்மிடம் அவர் பேசியதிலிருந்து...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x