Published : 16 May 2022 08:00 AM
Last Updated : 16 May 2022 08:00 AM

ப்ரீமியம்
க்விக் காமர்ஸை வெல்லுமா அண்ணாச்சி கடைகள்?

பள்ளிக் காலத்தில் என்னை என் பாட்டி பாதித்தூக்கத்தில் தட்டி எழுப்பி ‘தூங்கினது போதும், போய் கிருஷ்ணா ஸ்டோர்லேருந்து பெருங்காயம் வாங்கிண்டு வா சீக்கிரம்’ என்று துரத்துவாள். தூக்கக்கலக்கத்தில் ‘அர்த்த ராத்திரில யார் கடை திறந்து வச்சிருப்பா, ஏன் படுத்தற’ என்று கத்துவேன். ‘மணி எட்டாறது, அண்ணாச்சி உன்னை மாதிரி இல்ல, கடைய திறந்து காத்துண்டிருக்கார்’ என்று விரட்ட, தூக்கத்தை கெடுத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாய் கடைக்குப்போய் வாங்கி வருவேன்.

இது ஏதோ ஒரு நாள் நடந்த கூத்தல்ல. அனுதினம் என் ஆனந்த அனந்தசயனம் அநியாயமாய் அவ்வாறே அழிக்கப்பட்டது. என் தூக்கம் இப்படி பெருங்காயத்தில் கரைந்திருக்க வேண்டாம்! இக்கட்டுரை என் தூக்கம் பற்றியதல்ல. ‘ஆத்திர அவசரத்திற்கு உப்பு, மிளகாய், சீயக்காய், சோப், சானிடரி நாப்கின் தேவை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள், பத்து நிமிடத்தில் உங்கள் வீட்டுக்கேவந்து டெலிவரி செய்கிறோம்’ என்று கிளம்பியிருக்கும் ஆன்லைன் நிறுவனங்கள்பற்றியது. இந்த நிறுவனங்கள்என் பள்ளி காலத்தில் பிறந்திருந்தால் நிம்மதியாய் தூங்கியிருப்பேன். தற்போதைய தலைமுறையினரின் தூக்கத்தையாவது பாட்டிகளிடமிருந்து காப்பாற்ற அவதரித்தார்கள் ஆபத்பாந்தவர்கள் என்று திருப்திபட வேண்டியதுதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x