Published : 15 May 2022 11:20 AM
Last Updated : 15 May 2022 11:20 AM

ப்ரீமியம்
பிரச்சினையா?: தயங்காமல் அழையுங்கள் 181


பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுப்பதற்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு சட்டங்களையும் திட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அவற்றுள் பல திட்டங்கள் குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே வன்முறையைச் சகித்துக் கொண்டு வாழும் பெண்களும் உண்டு. ஆம்புலன்ஸ், காவல் துறை போன்றவற்றுக்கு இணையாக அவசர உதவிக்காகப் பெண்கள் எந்நேரமும் அழைக்கும் வகையில் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட 181 என்கிற உதவி எண் குறித்துப் பலரும் அறிந்திருக்கவில்லை.

இந்த மகளிர் உதவி எண் தமிழ்நாட்டிலும் நடைமுறையில் உள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது. வீடு, பணியிடம், பொதுவெளி என்று எந்த இடத்தில் பிரச்சினையை எதிர்கொண்டாலும் பெண்கள் இந்த இலவச உதவி எண்ணுக்கு அழைக்கலாம். 24 மணிநேரமும் இந்தச் சேவை உண்டு. குடும்ப வன்முறையை எதிர்கொள்கிற பெண்கள் மட்டுமல்ல; வன்முறைக்கான மிரட்டலை எதிர்கொள்கிறவர்கள், அவசர உதவி தேவைப்படுகிறவர்கள், துயரத்தில் இருக்கிற பெண்கள் - குழந்தைகள் என அனைத்துவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறவர்களும் இந்த மகளிர் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x