Published : 15 May 2022 11:02 AM
Last Updated : 15 May 2022 11:02 AM

ப்ரீமியம்
அரிசியின் புதிய அவதாரம்!: வசீகரச் சுவையுடன் மயக்கும் உணவு வகைகள்

கருங்குறுவை, சிவப்புக் கவுனி, நவரா, தூயமல்லி, தங்கச் சம்பா, குழியடிச்சான் போன்ற மரபு அரிசி வகைகளைப் பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன் நம்மில் பலருக்குத் தெரிந்திருக்காது. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. மரபார்ந்த அரிசி வகைகளைப் பலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஆனால், அவற்றைக் கொண்டு சோறு, இட்லி, தோசை, இனிப்பு என்றுதான் எப்போதும் சாப்பிட வேண்டுமா, வேறு உணவு வகைகளைச் செய்வதற்கு வழியில்லையா என்கிற கேள்வி அடிக்கடி எட்டிப்பார்க்கும்.

மரபார்ந்த அரிசி வகைகளைச் சமைக்கும் போது, எவ்வளவு தண்ணீர் விடுவது, எத்தனை நிமிடங்களுக்கு வேக வைப்பது என்பது போன்ற சந்தேகங்களும் எழலாம். இன்னும் சற்று ஆழமாக யோசித்தால் நவீன உணவு வகைகள், புதிய சுவைகளுக்கு ஏற்ப நமது மரபு அரிசி வகைகளைப் பயன்படுத்த முடியுமா என்கிற கேள்வியும் இருக்கிறது. மரபு அரிசி வகைகளைப் பயன்படுத்துவதில் இப்படிப் பல்வேறு மனத் தடைகள் பலருக்கும் உள்ளன. இது போன்ற கற்பிதங்களைத் தகர்க்கிறார் பிரபல சமையல் கலைஞரும் உணவு சார்ந்த பயணம், வரலாற்றை ஆவணப்படுத்திவருபவருமான ராகேஷ் ரகுநாதன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x