Published : 12 May 2022 07:50 AM
Last Updated : 12 May 2022 07:50 AM

ப்ரீமியம்
சித்திரப் பேச்சு: மன்மதன் அம்பு; ரதியின் வில்!

காதல் கடவுள் மன்மதனின் பத்தினியான ரதிதேவியின் சிற்பம்தான் இது. சேலம், தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில்தான் இந்தச் சிற்பம் உள்ளது. மன்மதன் தனது கிளி வாகனத்தில் அமர்ந்தபடி அம்பராத்தூளியில் இருந்து மலர் அம்பை எடுக்கும் பாவனையில் இருக்கிறார்.

ஆனால், ரதிதேவியோ தனது அன்ன வாகனத்தில் அமர்ந்தபடி, கரும்பு வில்லில் நாண் பூட்டி மலர் அம்பை யார் மீதோ விடும் கோலத்தில் காணப்படுகிறார். அம்பு விடுவதற்காக கால்களை நிலத்தில் அழுத்திக்கொண்டு, ஆசனத்தில் இருந்து சற்று எழுந்தபடி, வடிவமைக்கப் பட்டுள்ளது சிறப்பு. தலையில் நெற்றிச்சுட்டியும், சூரியபிரபை போன்ற அணிகலன்களையும், காதில் அழகிய தோடும், மார்பிலும் தோளிலும் மற்றும் கைகளிலும் முத்துக்களை கோத்த அணிமணிகளை பூண்டுள்ளாள். மற்ற தலங்களில் ரதிதேவியின் சிகை அலங்காரம் கொண்டையுடன் அமைந்திருக்கும். இத் தலத்தில் ரதியின் சிகையலங்காரம் சடை பின்னி கூந்தலை தொங்கவிட்டபடி இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. இந்த அமைப்பே அவரை மேலும் சௌந்தர்ய சுந்தரியாக காட்டுகிறது. தலையில் தாழம்பூ மடல் சூடி இருப்பதும், கூந்தலின் அடியில் குஞ்சலம் சூடியிருப்பதும் தனி சிறப்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x