Published : 09 May 2022 07:50 AM
Last Updated : 09 May 2022 07:50 AM

ப்ரீமியம்
சிறப்பு சூழல் முதலீட்டுத் திட்டங்கள் அதிக கவனம் பெறுவது ஏன்?

கரோனா காலகட்டத்தில் பங்குச் சந்தையில் நுழைந்தவர்கள் 2020-ம் ஆண்டில் ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு சவால்களை தங்களது முதலீட்டில் எதிர்கொண்டனர் என்றால் அது மிகையல்ல. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பங்குச் சந்தையில் மிகப் பரவலாக 10 சதவீத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் பொருள்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் நிக்கெல் உலோகத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை கடுமையான நெருக்கடியில் ஆட்டோமொபைல் துறை இருந்தது.

செமிகண்டக்டர்களுக்கு ஏற்பட்ட கடுமையான தட்டுப்பாடு ஆட்டோமொபைல் துறையை முடக்கிப்போட்டது. அதற்கு முன்பு கரோனா பரவல் தீவிரமாயிருந்த காலத்தில் ரியல் எஸ்டேட் துறை கடுமையான சரிவை எதிர்கொண்டிருந்தது. இந்த காலகட்டத்தில் ரியல்எஸ்டேட் நிறுவன பங்குகளும் கடுமையான பின்னடைவை சந்தித்திருந்தன. இவை அனைத்துமே சிறு உதாரணங்கள்தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எத்தகைய மாற்றங்களை, பாதிப்பை குறிப்பிட்ட துறைகளில் ஏற்படுத்துகிறது என்பதை குறிப்பிடத்தான். அதேசமயம் இத்துறைகளில் நிகழ்ந்த மாற்றங்களின் சாதக அம்சங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை உணர்த்துவதும்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x