Published : 01 May 2022 07:29 AM
Last Updated : 01 May 2022 07:29 AM

ப்ரீமியம்
மூன்றாவது தோல்வி

பெண்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கப்பட வேண்டிய முன்னகர்வு என்கிறபோதும், அரசியலுக்கு வருகிற பெண்கள் அனைவருமே மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதில்லை. பெண்களிலும் வலதுசாரித்தனத்துடன் நடந்துகொள்கிற அரசியல்வாதிகள் உண்டு. பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மூன்றாம் முறையாகப் போட்டியிட்டுத் தோற்றிருக்கும் மரின் லு பென், இந்தத் தோல்வியைத் தனது மூன்றாம் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டத்தில் பட்டப்படிப்பை முடித்த மரின் லு பென், தன் தந்தையின் தேசிய முன்னணிக் கட்சியில் 1998இல் இணைந்தார். 2003இல் அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2011இல் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொன்னதற்காக 2015இல் தன் தந்தையைக் கட்சியைவிட்டு நீக்கினார். 2012இல் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்தவர், 2017 தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்தார். தற்போது நடந்து முடிந்த 2022 தேர்தலில் தோல்வியடைந்தபோதும் 41.5 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. தன்பாலின உறவுக்கு எதிர்ப்பு, கருக்கலைப்புக்கு மறுப்பு, மரண தண்டனைக்கு ஆதரவு, அகதிகளின் குடியேற்றத்துக்கு எதிர்ப்பு என்று பெரும்பாலான விஷயங்களில் வெகு மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுத்ததுதான் 2012 தேர்தல் தோல்விக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இருந்தபோதும் தேசியவாதம், பொருளாதாரம், குடியேற்றம், வெளியுறவுக் கொள்கை உள்ளிட்டவற்றில் இப்போதும் பிற்போக்கான கருத்துகளையே மரின் கொண்டுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x