Last Updated : 26 Apr, 2022 07:41 AM

 

Published : 26 Apr 2022 07:41 AM
Last Updated : 26 Apr 2022 07:41 AM

சேதி தெரியுமா?

ஏப்.13: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

ஏப்.14: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வைத்த தேநீர் விருந்தை ஆளுங்கட்சியான திமுக புறக்கணித்தது.

ஏப். 15: ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரெய்க்ஜாவிக் ஓபன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஏப். 18: டெல்லி தீன் மூர்த்தி வளாகத்தில் ‘பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா’ என்கிற அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இங்கு இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களின் பதவிக் காலம் ஞாபகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்.19: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 131 யானைகள் உயிரிழந்துள்ளன என்று யானைகள் இறப்பு குறித்து அமைக்கப்பட்ட குழு அறிக்கை சமர்பித்தது.

ஏப்.20: டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் 200 மீ. பட்டர்ஃபிளை பிரிவில் தங்கப் பதக்கமும் 1500 மீ. ஃப்ரீஸ்டைல் பிரிவில் 16 வயதான வேதாந்த் மாதவன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x