Published : 19 Apr 2022 12:04 PM
Last Updated : 19 Apr 2022 12:04 PM

ப்ரீமியம்
பெண்கள் 360: ‘அண்ணன்’ திரும்ப வந்துட்டாரு?

பாலியல் வல்லுறவு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் ‘அண்ணன் திரும்பி வந்துவிட்டார்’ என்று பொருள்படும்படி பதாகை வைத்ததற்கு உச்ச நீதிமன்றம் தன் அதிருப்தியைத் தெரிவித்தது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபங் கோன்டியா, ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர். அவர் மீது பெண் ஒருவர் பாலியல் வல்லுறவு புகார் அளித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவித்தது. அதைத் தள்ளுபடி செய்யுமாறு பாதிக்கப்பட்ட பெண் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா தாஸ் அடங்கிய மூவர் அமர்வுக்கு முன் ஏப்ரல் 11 அன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும்விதமாக, ‘அண்ணன் திரும்பி வந்துவிட்டார்’ என்கிற பதாகை வைக்கப்பட்டதை மனுதாரர் மூலம் அறிந்த மூவர் அமர்வு அது குறித்துக் கேள்வி எழுப்பியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x