Last Updated : 10 Apr, 2022 08:31 AM

 

Published : 10 Apr 2022 08:31 AM
Last Updated : 10 Apr 2022 08:31 AM

ப்ரீமியம்
பெண்கள் நினைத்தால் புவியைக் காக்கலாம்

கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, உடல் நலம் என்று பலவிதமான குழப்பங்களுக்கும் தீர்வுவைத்திருக்கிறார் சசிகலா. அந்தத் தீர்வு வழிகாட்டுதலாக மட்டும் நின்றுவிடுவதில்லை. இலக்கை அடையும்வரை உடனிருந்து உதவுகிறார். குறைந்தது பத்து லட்சம் பெண்களையாவது தற்சார்புடன் வாழும் வகையில் மாற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார்.

2014-ல் ஐ.நா. சார்பில் நடத்தப்பட்ட காலநிலை உச்சி மாநாடு சசிகலாவின் கவனத்தை ஈர்த்தது. புவி மாசுபடுவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தபோதிலும் நம் கையில் என்னவெல்லாம் இருக்கிறது என்று யோசித்தார். மாதவிடாய் நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக மாறுகின்றன என்பதைத் தேடி அறிந்தவர் அதிர்ந்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மொரீஷியஸில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி கருத்தரங்கும் சசிகலாவைப் பாதித்தது. “அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றவர் சொன்ன தகவல்கள் அதிரவைத்தன. அகழ்வாய்வின்போது 100 அடிக்குக் கீழே, யாரும் பயன்படுத்தாத மண்ணை வைத்துத்தான் பண்டைய வரலாற்றைக் கண்டுபிடிப்பார்களாம். ஆயிரம் வருடங்கள் கழித்து பூமியைத் தோண்டினால் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளும், எலெக்ட்ரானிக் கழிவுகளும்தான் இருக்குமாம். அதிலும் 40 சதவீதக் கழிவுகள் நாப்கின்களாக இருக்கும் என்றார். இதுதான் என்னைச் சிந்திக்கவைத்தது” என்கிறார் சசிகலா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x