Published : 04 Apr 2022 10:35 AM
Last Updated : 04 Apr 2022 10:35 AM

ப்ரீமியம்
டெபாசிட்தாரர்களை கைவிடுகின்றனவா வங்கிகள்?

லெவின் ஆறுமுகம் 

‘வட்டி’ என்பதை காத்திருப்பதற்காகக் கொடுக்கப்படும் வெகுமதி என்கிறது பொருளாதாரம். அதாவது பணத்தை கடனாகக் கொடுத்த ஒரு நபர், அதைத் திரும்பப் பெறுவதற்கு சில காலம் காத்திருக்க வேண்டி உள்ளதல்லவா, அந்தக் காத்திருப்புக் காலத்திற்காக அவருக்கு, அவர் கொடுத்த பணத்துடன் சிறிது பணத்தையும் சேர்த்து கொடுப்பதுதான் ‘வட்டி’ எனப்படுகிறது.

வட்டிக்காக கடன் கொடுக்கும் தனி நபர் முதல் தேசிய வங்கிகள் வரை இந்த பார்முலாவில்தான் செயல்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் வட்டிதான் வங்கித் தொழிலின் அடிப்படை. வங்கியில் பணம் போடுபவர் இல்லையென்றால் ஒரு வங்கி தன் வணிகத்தை நடத்த முடியாது. மக்களின் வைப்புத் தொகையை, கடன் தேவைப்படுவர்களுக்குக் கொடுத்து, அதற்கு வட்டியைப் பெறுவதன் மூலமே வங்கிகள் இயங்குகின்றன. அதனால், வங்கியில் பணம் போடும் வாடிக்கையாளர்களை வங்கிகள் மிகவும் மதிப்புடன் நடத்திவந்தன.
ஆனால், கடந்த இருபது ஆண்டுகளாக நிலைமை மாறியுள்ளது. அதாவது, ஒரு காலத்தில் மதிப்புடன் நடத்தப்பட்டு வந்த வைப்புதாரர்கள், தற்போது வேண்டா வெறுப்பாக வேறு வழியின்றி வங்கிகளுக்கு வந்துகொண்டிருக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x