Published : 03 Apr 2022 11:00 AM
Last Updated : 03 Apr 2022 11:00 AM

ப்ரீமியம்
நகைச்சுவை உணர்வு இல்லாத பெண்கள்?

கணவன் ஒருவர் தன் மனைவியின் தோற்றத்தைக் கேலியாகப் பேசியவரின் கன்னத்தில் அறைந்த நிகழ்வு கடந்தவாரம் பேசுபொருளானது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் மேடையில் நடந்த இந்த நிகழ்வு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. நோயின் விளைவாகத் தலைமுடி உதிர்ந்து மொட்டையாக இருக்கும் தன் மனைவியின் தோற்றம் குறித்துக் கேலி செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தாக்கியது சரி, தவறு, அன்பின் வெளிப்பாடு என்று பல்வேறுவிதமான விமர்சனங்கள் எழ, ‘உருவக் கேலி’ குறித்துப் பொதுச் சமூகம் உரையாட இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒருவரது புறத்தோற்றத்தையும் ஆளுமையையும் வைத்துக் கேலி பேசி சிரிப்பது நம் பண்பாட்டுடன் கலந்துவிட்ட செயல்பாடாகிவிட்டது. முட்டைக் கண்ணி, போண்டா மூக்கு, மாட்டுப் பல்லன், கோணக் காது என்பது போன்ற விளிப்புகள் குழந்தைப் பருவத்திலேயே நமக்கு அறிமுகமாகத் தொடங்கிவிடுகின்றன. அதனாலேயே நம் சமூகத்தில் உருவக் கேலிகள் இயல்பானவையாகப் பார்க்கப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x