Last Updated : 05 Oct, 2021 03:11 AM

 

Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

சேதி தெரியுமா?

செப்.24: பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வகுக்க கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

செப்.25: உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநராக உள்ள எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை, அந்தப் பதவிக்கு இரண்டாவது முறையாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பரிந்துரைத்துள்ளன.

செப்.26: இந்தியாவின் முதல் விளையாட்டுத் துறை நடுவண் தீர்ப்பாயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

செப்.26: செக் குடியரசில் நடைபெற்ற ஆஸ்ட்ராவா ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் ஷுவாய் ஜங் இணை பட்டம் வென்றது.

செப்.27: அமெரிக்காவின் டகோடா மாகாணத்தில் உள்ள யாங்டன் நகரில் நடந்த 2021 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வில்வித்தை அணி 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

செப்.27: ஆயுஷ்மான் பாரத் என்கிற தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டையையும் பதிவேட்டையும் உள்ளடக்கியது இத்திட்டம்.

செப்.28: சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் துறை அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

செப்.28: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றார்.

செப்.29: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முழு நேரத் தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.

அக்.1: போலீஸ், அதிகாரிகளின் கொடுமைகள் குறித்து சாமானியர்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆதரவாக இருக்கும் என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x