Published : 09 Aug 2021 05:53 AM
Last Updated : 09 Aug 2021 05:53 AM

எஸ்ஐபி: நிதி சுதந்திரத்துக்கான சரியான வழி

சி .மணிகண்டன்
சிஎம் இன்வெஸ்ட் இந்தியா ஃபைனான்சியல் சர்வீசஸ்

எல்லோருமே ஏதோ ஒரு தருணத்தில்பணத்தை சேமிக்க முயற்சி செய்கிறோம். சேமிப்பது மட்டுமல்லாமல் சேமிக்கிற பணத்தைப்
பெருக்குவதற்கான வாய்ப்புகளைப் பற்றியும் யோசிக்கிறோம். பணத்தைப் பெருக்கவேண்டுமெனில் நாம் பணத்தை சேமித்தால் மட்டுமே போதாது. சேமிக்கும் பணத்தை கூடுதல் வருமானம்தரக்கூடிய வகையில் முதலீடு செய்யவும் வேண்டும். அப்படியான முதலீட்டு வாய்ப்புகளைத்தேடும்போது நமக்கு பல திட்டங்கள் வாய்ப்புகள் தோன்றலாம். அவற்றில் சமீபகாலங்களில் பரவலாக அறியப்படுகிற ஒரு முதலீட்டுத் திட்டம்தான் எஸ்ஐபி. அதாவதுமுறைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட கால இடைவெளியிலான முதலீட்டு திட்டம்.

எஸ்ஐபி என்பது என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும்பட்சத்தில் நீங்கள் மொத்தமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்டதொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாகவோ முதலீடு செய்யலாம். இவ்வாறு தொடர்ச்சியாக குறிப்பிட்ட கால இடைவெளியில் மியூச்சுவல் ஃபண்டுகள் செய்யப்படும்முதலீடு எஸ்ஐபி ஆகும்.

எஸ்ஐபியின் பலன்கள்

முதலாவது, நீங்கள் எஸ்ஐபி திட்டத்தின்மூலம் எந்த வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். முக்கியமாக எஸ்ஐபியின் மிகப்பெரிய பலன் எனில் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வதில் முழுமையான சுதந்திரம் வழங்கப்படுகிறது மேலும் முதலீடு நம்முடைய விருப்பம்மற்றும் வசதிக்கு ஏற்பவும் உள்ளது. அதேசமயம் முதலீடு செய்வதில் ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் உதவுகிறது.

எஸ்ஐபியின் அடுத்த முக்கியமான பலன் நிதிசார் சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. குறிப்பாக பங்குச்சந்தைகளின் தினசரி ஏற்ற இறக்கங்கள் குறித்து பயம் கொள்ள தேவையிருக்காது. சந்தையைப் பொறுத்தவரை சிலநேரம் ஏற்றம் இருக்கும் சில நேரம் இறக்கம் இருக்கும். சந்தையின் செயல்பாடுகளைப்பார்த்து நாமாக முதலீடு செய்யும்போது அதன் ஏற்ற இறக்கங்களால் அதிக தாக்கத்துக்குஆளாக வாய்ப்புள்ளது. அதற்குப் பதிலாக எஸ்ஐபி மூலம் தொடர்ச்சியாக முதலீடு செய்தால்அது சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு அப்பாற்பட்ட முதலீடாக இருக்கும். சிலநேரங்களில் இதுவும் ரிஸ்க் உள்ளதாகத் தோன்றலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போதுகுறைவான மதிப்புகளில் முதலீடு செய்து அதிக புள்ளிகளைப் பெற்றிருப்பதைக் காணலாம். இந்தமுறையில் சந்தையின் எந்தவித ஏற்றத்தையும் நாம் தவறவிட்டிருக்க மாட்டோம். மேலும்இதில் சராசரி ரூபாய் மதிப்பு அடிப்படையிலும் பலன் உண்டு. அதாவது நாம் வெவ்வேறுமதிப்புகளில் முதலீட்டு புள்ளிகளை வாங்குகிறோம். ஆனால் இறக்கங்களின்போது குறைந்தவிலையில் அதிகப் புள்ளிகளை நாம் வாங்குகிறோம். இதனால் ஏற்றத்தின்போது முதலீடானதுஅதிக மதிப்புடையதாக மாறும்.

கூட்டு வட்டி அதிசயம் என்ற முக்கியமான பலனும் எஸ்ஐபி மூலமான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ளது. சுருக்கமாக சொன்னால் முதலீட்டின் மீது கிடைக்கும் வருமானமும் முதலீடாக செயல்படஆரம்பிக்கும். அதுவும் குறிப்பிட்ட வருமானத்தை தரத் தொடங்கும். இதனால் இறுதி வருமானமானது அதிகமாகக் கிடைக்கும். நீண்டகால அடிப்படையில் இந்த கூட்டு வட்டி அதிசயமானது மாதாந்திரம் முதலீடு செய்யும் சில ஆயிரங்களை பல லட்சங்களாக மாற்றக்கூடிய அளவுக்கு செயலாற்றக்கூடியதாகும்.

மேலும் எஸ்ஐபியின் இன்னொரு பெரிய பலன், இந்த முறையிலான முதலீட்டின் மூலம் நம்முடைய நிதிசார்ந்த இலக்குகளை மிகத் துல்லியமாகத் திட்டமிடலாம். நீண்டகால இலக்கு, குறுகிய கால இலக்கு எனத் தனித்தனியாகத் திட்டமிட்டு அதற்கேற்ப முதலீடுகளை மேற்கொள்ளலாம். இலக்கை நோக்கிய முதலீட்டு பயணத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதையும் இலக்கை எட்ட எவ்வளவு காலம் ஆகும் என்பதையும் எப்போது வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும். இந்தக் காலத்தில் நம்முடைய மாதாந்திர முதலீடானது கூட்டு வட்டி அதிசயத்தின் மூலம் இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x