Last Updated : 13 Jul, 2021 10:19 AM

 

Published : 13 Jul 2021 10:19 AM
Last Updated : 13 Jul 2021 10:19 AM

சேதி தெரியுமா?

ஜூலை 3: தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோவில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டது.

ஜூலை 5: உத்தராகண்ட்டில் முதல்வர் பதவியிலிருந்து தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்ததையடுத்து பாஜக சட்டப்பேரவைத் தலைவராக புஷ்கர் சிங்தாமி தேர்வானார்.

ஜூலை 6: சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ஸின் (10,273 ரன்கள்) சாதனையை இந்தியாவின் மிதாலி ராஜ் முறியடித்தார்.

ஜூலை 6: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டியன் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜூலை 7: கர்நாடகம், மத்திய பிரதேசம். ஹிமாச்சல பிரதேசம் உள்பட எட்டு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்துக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

ஜூலை 7: ஹிமாச்சல பிரதேசத்தில் ஆறு முறை முதல்வர் பதவி வகித்த வீரபத்ர சிங் (87), பாலிவுட் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் (98) ஆகியோர் காலமானார்கள்.

ஜூலை 7: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 43 பேர் பொறுப்பேற்றனர்.ஒன்றிய இணை அமைச்சராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் பதவியேற்றார்.

ஜூலை 8: ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்கத் தமிழ்நாடு அரசு ரூ. 1.25 கோடி நிதி உதவி அளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x