Published : 25 Dec 2015 12:00 PM
Last Updated : 25 Dec 2015 12:00 PM

விழாக் காலம்: ஆச்சிக்கு மரியாதை!

திரையுலகில் பொக்கிஷமாய், கலையுலக ராணியாய் மங்காத புகழுடன் ஜொலித்தவர் பழம்பெரும் நடிகை ஆச்சி.மனோரமா. கலையுலகின் அனைத்து துறைகளிலும் மின்னிய அவரது ஆற்றலுக்கு மரியாதை செய்யும் ஓர் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியே ‘ஆச்சிக்கு மரியாதை’!

ஆச்சியின் ஐம்பது ஆண்டு காலத் திரைத்துறை சாதனையை ஏற்கெனவே ‘மனோரமா 50’ என்ற வெற்றிகரமான இன்னிசை நிகழ்ச்சியாக நிகழ்த்திக் கொண்டாடிய, 7,500-க்கும் அதிகமான மேடைகள் கண்டு உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்திய சங்கர் ராமின் ‘சாதகப் பறவைகள்’ இசைக்குழுவே தற்போது ஸ்டார் ஈவன்ட் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் ஆச்சியின் ரசிகர்களை மகிழ்விக்க இம்முறை இன்னும் பிரம்மாண்டமாக, நேர்த்தியாகவும் நினைவுகளை கிளறித் தாலாட்டும் விதமாகவும் ‘ஆச்சிக்கு மரியாதை’எனும் மெகா இன்னிசை இரவை நிகழ்த்த இருக்கிறார்கள்

“வா வாத்தியாரே ஊட்டாண்ட”, “தில்லாலங்கடி ஆட்டம் போட்டு”, “முத்துக் குளிக்க வாரீகளா” என தன் வசீகர குரலால் அனைவரையும் கட்டியிழுத்த ஆச்சியின் புகழ்பெற்ற பாடல்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் நடித்த படங்களின் மெட்லிகள், காமெடி கலாட்டா, சின்னத்திரை ஜூனியர் மற்றும் சீனியர் சிங்கர்களின் கலக்கல் ஃபெர்மான்ஸ் என வருகிற ஜனவரி 1, 2016 புதுவருட புத்தாண்டு நாளில் திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள், முன்னணிக் கலைஞர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஒரு மெகா இன்னிசை இரவாக சென்னை காமராஜர் அரங்கில் மாலை 6 மணிக்கு அரங்கேற்றப் போகிறது. இதில் பங்கேற்று ‘ஆச்சிக்கு மரியாதை’ செய்ய அழைக்கிறது சாதகப் பறவைகள், ஸ்டார் ஈவண்ட் கூட்டணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x