Published : 29 Sep 2020 09:08 AM
Last Updated : 29 Sep 2020 09:08 AM

பள்ளி மாணவர்கள் படிக்க நிதியுதவி

பள்ளிக் கல்வி நிறைவு செய்த மாணவர்கள் மேற்கொண்டு படிப்பதற்கான நிதியுதவி திட்டத்தை கோல்கேட் பாமோலிவ் (இந்தியா) அறிவித்துள்ளது.

தகுதி: 2019இல் பத்தாம் வகுப்பு / பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கான நிதியுதவி திட்டம் இது. இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் தொடர்ந்து பிளஸ் 1 படிப்பதற்கும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இளங்கலை, டிப்ளமா ஆகிய படிப்புகளையோ தொழிற்கல்விப் படிப்புகளையோ படிக்கவும் இந்த நிதியுதவியைப் பெற முடியும். உதவிகோரும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

நிதியுதவி: தற்போது அவர்கள் படித்துவரும் கல்வி முறையை அடியொட்டி ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம்வரை மூன்றாண்டுகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையம்வழி விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x