Last Updated : 02 Sep, 2015 12:19 PM

 

Published : 02 Sep 2015 12:19 PM
Last Updated : 02 Sep 2015 12:19 PM

கற்பனை உயிரினம்: மனிதன் பாதி குதிரை பாதி

மனிதனும், குதிரையுடன் சேர்ந்து ஒரு உருவமாக இருந்தால் எப்படி இருக்கும்? சென்டார் என்ற உயிரினம் இப்படித்தான் இருக்கும். மனிதனின் முகமும், கைகளும், குதிரையின் உடலையும் கொண்ட கற்பனை உயிர் இது. இதைப் பற்றி இந்த வாரம் பார்ப்போமா?

* கிரேக்கப் புராணக்கதைகளில் வரும் ஒரு விலங்கு இது. காலங்காலமாக ஐரோப்பிய ஓவியங்களில் இது இடம்பெற்று வருகிறது.

* சென்டார் விலங்கு முரட்டுத்தனம் கொண்டவை. இவற்றில் சாது குணம் கொண்டவையும் உண்டு.

* சென்டார்களுக்குப் போதை தரக்கூடிய திரவங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். கொஞ்சம் அதிகமாகக் குடித்து மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளுமாம். மனிதர்களைக் கண்டால் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளுமாம்.

* சென்டார்கள் தங்களுக்கெனக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு தனியாக வாழ்பவை.

* கிரேக்கத்தில் தெசாலி என்ற இடத்தில் உள்ள பெலியன் மலைப்பகுதியில் இவை வாழ்வதாகக் கதைகள் உள்ளன.

* சென்டார்களின் தந்தை சென்டாரஸ் என்றழைக்கப்படுகிறது. அப்போலோ கடவுளின் மகன்தான் சென்டாரஸ் என்றும் கருதப்படுகிறது.

* ஹோமரின் கவிதைகளில் சென்டார்கள் இடம் பிடித்துள்ளன.

* கிரேக்கக் கதைகளில் வரும் செய்ரான் என்ற பெயர் கொண்ட சென்டார் மிகவும் படித்த ஞானியாக இருந்திருக்கிறது. இயற்கையில் அமைதியைத் தேடும் சென்டார் இது. மருத்துவம், கலைகள், தத்துவம் மற்றும் நுண்கலைகளில் அறிவும் ஆர்வமும் கொண்ட உயிரினமாகவும் இதைச் சொல்கிறார்கள்.

* ஹெர்குலசின் கதையில் வரும் போலஸ் என்ற சென்டாரும் மிகவும் நல்ல குணம் கொண்டது.

* நவீன கால ஓவியங்களிலும் சென்டார்கள் இடம்பிடித்து வருகின்றன. ஹாரிபாட்டரின் மந்திரக் கதைகளிலும் நார்னியாவின் கதைகளிலும் சென்டார் இடம்பெறுகிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x