Last Updated : 12 Aug, 2020 09:40 AM

 

Published : 12 Aug 2020 09:40 AM
Last Updated : 12 Aug 2020 09:40 AM

ஆகஸ்ட் 15: சுதந்திரத் துளிகள்...

* பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் தலைவரும் பிரதமருமான க்ளெமென்ட் அட்லீதான் இந்தியாவுக்குச் சுதந்திரத்தை வழங்கினார்.

* ஆகஸ்ட் 15 அன்று அச்சு நாடுகளைச் சேர்ந்த ஜப்பான், நேச நாடுகளிடம் சரணடைந்ததை நினைவுகூரும் விதத்தில் மவுண்ட் பேட்டன் இந்த நாளில் சுதந்திரத்தை அறிவித்தார்.

* கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி நகரில் உள்ள கர்நாடகா காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம்தான் இந்திய தேசியக் கொடியைத் தயாரித்து நாடு முழுவதும் வழங்குகிறது.

* முதல் சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. 1911-ம் ஆண்டு தாகூர் எழுதிய ‘ஜனகணமன’ பாடல், 1950-ம் ஆண்டுதான் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.

* தேசிய கீதத்தை 52 நொடிகளில் பாடிவிடலாம். ஒரு நிமிடத்துக்கு மேல் பாடக் கூடாது.

* இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அந்தக் கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி கலந்துகொள்ளவில்லை. இந்தியப் பிரிவினையால் வங்கத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தடுப்பதற்காக, உண்ணாவிரதம் இருந்தார் காந்தி.

* இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கோவா போர்த்துகீசியப் பகுதியாக இருந்தது. 1961-ம் ஆண்டுதான் இந்தியாவுடன் இணைந்தது.

* இந்தியா, பஹ்ரைன், வட கொரியா, லீக்கின்ஸ்டைன், தென் கொரியா ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x