Published : 30 Sep 2015 12:59 PM
Last Updated : 30 Sep 2015 12:59 PM

குழந்தைப் பாடல்: மகாத்மா காந்தி

அஹிம்சை கொள்கை கொண்டவராம்

அகிலம் போற்ற வாழ்ந்தவராம்

பொய்யே பேசா வாழ்க்கையினை

அரிச்சந்திர நாடகத்தால் கற்றவராம் !

அடிமையில் இருந்த தேசத்தை

அன்பு நெறியில் மீட்டவராம் !

துப்பாக்கி பீரங்கி ஆயுதங்களை

கைத்தடி கொண்டு வென்றவராம் !

உழைக்கும் வர்க்கத்தின் அரையாடை

உடுத்த வைத்தது கதராடை !

மதுரை மண்தான் மகாத்மாவின்

மனதை மாற்றிய மாநகராம் !

ஓங்கி மிதித்த வெள்ளையனும்

உள்ளம் நெகிழ்ந்து திருந்தவே

காலணி ஒன்றைத் தன்கையாலே

சிறைக் காவலனுக்குத் தந்தாராம் !

குழந்தைகள் மகிழ்ந்து அன்பாலே

தாத்தா என்று அழைத்தனரே !

உலகம் என்றும் தழைக்கவே

அஹிம்சை வழியில் செல்வோமே !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x