Published : 15 Mar 2020 10:06 AM
Last Updated : 15 Mar 2020 10:06 AM

குறிப்புகள் பலவிதம்: குளிர்ச்சி தரும் வெள்ளரி

 மலிவான விலையில் கிடைக்கிற வெள்ளரி, கோடைக்கால கோளாறுகள் பலவற்றைத் தீர்க்க வல்லது. வெள்ளரிக்காய் சாறு குடித்துவந்தால் வாயுத் தொல்லை, குடற்புண், வயிற்றெரிச்சல் ஆகியவை குணமாகும்.

 ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொழுப்பைக் குறைக்கும் சக்தி வெள்ளரிக்கு உண்டு.

 சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலுக்கு வெள்ளரி விதையை அரைத்துத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

 ஆரோக்கியத்துடன் அழகும் தர வல்லது வெள்ளரி.வெள்ளரியைத் துண்டுகளாக்கி முகத்தில் தேய்த்துவந்தால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவை மறைந்து சருமம் பளபளக்கும்.

 கண்களை மூடி அவற்றின் மேல் வெள்ளரித் துண்டுகளை வைத்திருந்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.

 வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கிக் தயிரில் போட்டு அதனுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு கப் சாப்பிட்டால் தாகம், சோர்வு, களைப்பு நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

 வெள்ளரியை சாலடாகவோ பச்சடி செய்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நார்ச்சத்து கிடைப்பதுடன் எடையும் குறையும்.

 வறண்ட உதடுகளில் வெள்ளரிச் சாற்றைத் தடவி 20 நிமிடங்களுக்குப் பின்பு கழுவுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இப்படிச் செய்துவந்தால் உதடுகள் பளபளக்கும்.

 இரண்டு பிஞ்சு வெள்ளரியுடன் பனங்கற்கண்டு, ஒரு கப் தயிர் சேர்த்து மிக்ஸியில் அடித்து ஐஸ் துண்டுகளைப் போட்டுக் குடித்தால் வெயிலில் சென்றுவந்த களைப்பும் அதனால் ஏற்படும் உடல் உபாதைகளும் நீங்கும்.

 வெள்ளரியை வேகவைப்பதால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்துவிடும். அதனால் கூடியவரை பச்சையாக சாலட், பச்சடி, ஜூஸ் போன்றவற்றைச் செய்து சாப்பிடுவது நல்லது.

- தேவி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x