Published : 15 Jan 2020 11:49 AM
Last Updated : 15 Jan 2020 11:49 AM

தித்திக்கும் கரும்பு

புல் வகை தாவரத்தைச் சேர்ந்தது கரும்பு. முக்கியமான பணப்பயிர்களில் ஒன்றாக இருக்கிறது.

90 நாடுகளில் கரும்பு பயிரிடப்படுகிறது. 2015-ம் ஆண்டுக் கணக்கின்படி பிரேசில் அதிக கரும்பைப் பயிரிடும் நாடாக இருக்கிறது.

வணிகத்துக்காக பயிரிடப்படும் கரும்புகள் பெரும்பாலும் கலப்பு இனங்களே. 6 அடி முதல் 19 அடிவரை வளரக் கூடியது கரும்பு.

பருவநிலையைப் பொருத்து 9 மாதங்களில் இருந்து 24 மாதங்கள் வரை எடுத்துக்கொண்டு அறுவடைக்குத் தயாராகிறது கரும்பு.

80% கரும்பு, சர்க்கரை தயாரிப்புக்குப் பயன்படுகிறது.

கரும்புச் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கப்படுகிறது.

கரும்பிலிருந்து சாறு எடுக்கப்பட்டு, கொதிக்க வைக்கப்பட்டு, குளிர்விக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.

கரும்புக் கணுக்களில் இருந்து புதிய நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன.

- வி. சாமுவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x