Published : 31 Dec 2019 12:45 PM
Last Updated : 31 Dec 2019 12:45 PM

இணைய உலா: ஒரு வித்தியாசமான முயற்சி!

கனி

திருமணத்துக்கு முந்தைய ஒளிப்பட நிகழ்வான ‘ஃப்ரீ-வெட்டிங் போட்டோஷூட்’டை முற்றிலும் புதுமையாக, வித்தியாசமாக அணுகுகின்றனர் இன்றைய இளைஞர்கள். அப்படி, கேரளத்தைச் சேர்ந்த இளம்ஜோடி தங்கள் ‘ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட்’டைக் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் திட்டமிட்டிருந்தார்கள்.

நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டையும் எதிர்த்துப் போராட்டங்களை மக்கள் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், இவர்களின் இந்த ‘ப்ரீ-வெட்டிங் போட்டோஷூட்’ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண் கோபி, கொல்லத்தைச் சேர்ந்த ஆஷா சேகர் இருவரும் ‘நோ சிஏஏ’, ‘நோ என்ஆர்சி’ என்ற இரண்டு அட்டைகளுடன் ஜனவரி 31 அன்று நடக்கும் தங்கள் திருமணத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அவர்களின் இந்தச் சமூக அக்கறையை வெளிப்படுத்தக்கூடிய திருமண அழைப்பு போட்டோஷூட்’ நெட்சன்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களின் இந்த போட்டோஷூட் நெட்டிசன்களால் அதிக அளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

அருண் கோபி – ஆஷாவைப் போன்று கொச்சியைச் சேர்ந்த சச்சின்-ஸ்நேகா தம்பதியும் திருமணத்தன்று குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தனர். அத்துடன், கேரளத்தைச் சேர்ந்த ஷிபின்-ஹர்ஷா, பிரசாந்த் முத்து-விஸ்மயா ஆகிய இரண்டு தம்பதிகளும் இதே போன்று திருமணத்தன்று குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான அட்டைகளுடன் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தனர். இளம்தம்பதிகளின் இந்த வித்தியாசமான முயற்சி சமூக ஊடகங்களில் வைரலானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x