Published : 19 Sep 2019 12:20 PM
Last Updated : 19 Sep 2019 12:20 PM

வார ராசிபலன் 19-09-2019 முதல் 25-09-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய், சூரியன் சாரத்தில் இருப்பதால் கவலை நீங்கி மனோதைரியம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் கூடுதல் வேலைகள் இருக்கும். வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தினர், உங்களை ஆலோசிக்காமல் எதையும் செய்வது வருத்தத்தைத் தரலாம். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

பெண்களுக்கு, எதிலும் கவனத்துடன் ஈடுபடுவது நன்மையைத் தரும். கலைத் துறையினருக்கு, வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு, கட்சி மேலிடத்தின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். மற்றவர்களுக்கு முன்ஜாமீன் போடும் முன்னர் யோசித்துச் செயல்படுங்கள். மாணவர்களுக்கு, உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்குத் திருப்தியைத் தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: நவகிரகத்தில் செவ்வாயைப் பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் பணத்தேவை பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகள் இட்ட வேலையைத் திறமையுடன் செய்து முடித்துப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் திட்டமிடுவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு, தடைகளைத் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கலைத் துறையினருக்கு, சிறப்பான காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, பணிகள் மந்தமாகக் காணப்படும். மேலிடத்திடம் மோதலைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, நட்பில் கவனம் தேவை. படிப்பு தொடர்பில் மனக்கவலை ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: ரங்கநாதரை வணங்கி வர பிரச்சினைகளும் தீரும். செல்வச் செழிப்பும் ஆரோக்கியமும் உண்டாகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதனின் பலத்தால் மனத்தில் உத்வேகம் பிறக்கும். நிலுவைப் பணம் திரும்பக் கிடைக்கும். கடன் சுமைகள் நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பில் வெளியூர்ப் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது உங்களுக்கு மனநிம்மதியைக் கொடுக்கும்.

பெண்களுக்கு, தேவையான பண வரவு எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாகச் செய்துமுடிக்க இயலும். முயற்சிகள் வெற்றிபெறும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: ஆதிபராசக்தி அன்னையைத் தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தைத் தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக நிறைவேறும்.


கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் சஞ்சாரத்தால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகச் செய்து தருவார். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். அரசுப் பணிகளில் தொய்வு நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். உல்லாசப் பயணம் செல்ல நேரலாம். பெண்களுக்கு, திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். கலைத் துறையினருக்கு, எல்லா நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் போட்டிகள் நீங்கும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம்

எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வரத் துன்பங்கள் விலகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.


சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன், தனவாக்கு மற்றும் குடும்ப ஸ்தானத்தில் சுய சாரம் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொடர்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். முதொழில், வியாபாரம் தொடர்பில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார வழக்குகளைத் தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்தில் வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளுக்காகக் கூடுதலாகப் பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு, மனவருத்தம் நீங்கும். கலைஞர்களுக்கு, தங்குதடையின்றிப் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு, நல்ல பலன்கள் கிடைத்தாலும், விழிப்புடன் செயல்படுவது நன்மைதரும். மாணவர்களுக்கு, மற்றவர்களைத் திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: லட்சுமி நரசிம்மப் பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும்.


கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசி பலம் பெறுவதால் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்திலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

பெண்களுக்கு, விடாமுயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பாடுபட வேண்டியிருந்தாலும் அனைத்தும் நன்றாக நிகழும். மாணவர்களுக்கு, எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெறக் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை

எண்கள்: 5, 6

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க குடும்பப் பிரச்சினை, தொழிற்பிரச்சினை, கல்வித்தடை விலகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x