Last Updated : 27 May, 2014 10:00 AM

 

Published : 27 May 2014 10:00 AM
Last Updated : 27 May 2014 10:00 AM

ஜீரண மண்டலம்: குடலின் நீளம் 33 அடி

# இரைப்பையின் உட்சுவர் செல்கள் சில நாட்கள்தான் இருக்கும். புதிய செல்கள் மீண்டும், மீண்டும் உருவாகிக்கொண்டே இருக்கும். இவ்வாறு இரைப்பை செல்கள் முற்றிலுமாக 2 வாரத்துக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும்.

# சிறுகுடலிலுள்ள உட்சுவரில், நாம் உட்கொண்டு ஜீரண மடைந்த உணவுச் சத்துகளை உறிஞ்ச விரல் போன்ற அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பில் 3,000 உறிஞ்சும் விரல் நுனிகள் இருக்கும்.

# சிறுகுடலின் விட்டம் 2 அங்குலம். அதன் நீளம் சுமார் 22 அடி.

# நமது வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் முழுவதையும் ஒன்றாக நீட்டினால் 10 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். அதாவது 33 அடி!

# முன் உணவுக் குழலின் நீளம் 25 செ.மீ. ஆகும்.

# நமது குடலின் மொத்தப் பரப்பளவு 656 சதுர. அடி (200 மீட்டர்).

# ஒரே நேரத்தில் நமது இரைப்பை 2 லிட்டர் அளவுக்கு உணவு, நீரை அடக்கும் கொள்ளளவு கொண்டதாக இருக்கும்.

# சராசரியாக மனித இரைப்பை ஒரு வருடத்தில் 500 கிலோ உணவை ஜீரணிக்கும் தன்மை கொண்டிருக்கும்.

# தினந்தோறும் வாயில் சுரக்கும் உமிழ் நீரின் அளவு 1 முதல் 1.5 லிட்டர்.

# நாம் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கத் தினமும் நமது உடலில் மொத்தம் சுரக்கும் ஜீரண நீரின் அளவு சுமார் 7 லிட்டர்.

# நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பெறப்பட்ட குளூக்கோஸ் நமது உடலில் சிதைந்து சக்தி தருவதற்குச் சுமார் 50 வேதிவினைகள் நடைபெற்றாக வேண்டும்.

# நமது கல்லீரல் 600 வகையான வேலைகளை உடலில் செய்கிறது.

கல்லீரலில் சுமார் 1 லட்சம் நுட்பமான செல்கள் இருக்கின்றன.

# நீண்ட காலம் உயிர் வாழும் செல்கள் கல்லீரல் செல்கள்.

# மனித ஜீரண மண்டலத்திலிருந்து தினமும் 1 பைன்ட் (500 மி.லி.) வாயு வெளியேறுகிறது. இதில் பெரும்பாலான வாயு, வாயின் வழியாக உட்கிரகிக்கப்பட்டது. மீதியுள்ளது, உணவு ஜீரணமடையும்போது வெளிப்படுபவை.

# ஒரு மனிதன் ஓர் உருண்டை உணவை விழுங்கிவிட்டுத் தலைகீழாய் நின்றால்கூட அந்த உணவு வாய் வழியாகத் திரும்பி வருவதில்லை. அது இரைப்பையை அடைந்துவிடும். ஏனென்றால் மேற்குடலிலுள்ள தசைகள், விழுங்கிய உணவைப் படிப்படியாக ஓர் அலை போல இரைப்பையை நோக்கிச் செலுத்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x