Published : 05 May 2014 02:39 PM
Last Updated : 05 May 2014 02:39 PM

வரலாறு: எகிப்து பண்டைய நாகரிகம்

இலத்தீன் மொழியை அடிப்படையாகக் கொண்டது Civilization (நாகரிகம்) என்னும் சொல். இதற்கு, பிரஜை அல்லது நகரவாசி என்று பொருள். மனித இன வரலாறு, மனிதன் ஆடையில்லாமல், விலங்குகளை வேட்டையாடி, சமைக்காமல் உண்ட காலத்திலிருந்தே தொடங்குகிறது. முதன்முதலாக ஆற்றுப்படுகைகளில் நாகரிகம் வளரத் தொடங்கியதால், நதிக்கரை நாகரிகம் என்று அழைக்கப்பட்டது. இவை பல்வேறு வகையானவை. இவற்றில் நைல் நதிக்கரை நாகரிகம் மிகவும் தொன்மையானது என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எகிப்து நைல் நதியின் மகள் என்று குறிப்பிடப்படுகிறது. இது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

எகிப்து இரு வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டுமே பாரோவா என்கிற வலிமையான ஒரே பேரரசரின் கீழ் ஆட்சி செய்யப்பட்டன. இந்த பாரோக்கள் ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள். இவர்கள் சூரியக் கடவுளிடமிருந்து தோன்றினார்கள் என்று நம்பப்பட்டது. இவர்கள் மிகவும் ஆடம்பரமாகவும் சர்வ அதிகாரங்களுடனும் வாழ்ந்துவந்தனர்.

எகிப்திய சமுதாயத்தில் பாரோக்கள், மத்திய தர வகுப்பினர், அடிமைகள் என்று மூன்று பிரிவுகள் இருந்தன. மற்றபடி வேறு ஜாதிப் பிரிவுகள் இல்லை. மத குருமார்கள், பிரபுக்கள் சமுதாயத்தின் உயர்ந்த இடத்தில் இருந்தனர். வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள் நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர்கள். ஒருதார மணமும் பின்பற்றப்பட்டுவந்தது.

எகிப்தின் அரசியல், பொருளாதாரம், சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் சமயம் ஆதிக்கம் செலுத்தியது. பல தெய்வங்களை இவர்கள் வணங்கிவந்தனர்.

இறுதிச் சடங்கு முறைகள்

மிக விரிவான இறுதிச் சடங்கு முறைகளை எகிப்தியர்கள் பின்பற்றிவந்தனர். இறந்த பின்னும் மனிதன் அழிந்துவிடுவதில்லை அமரத்துவம் எய்துகிறான் என்ற நம்பிக்கை கொண்ட இவர்கள், உடல் கெடாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் இறுதிச் சடங்கை நடத்திவந்தார்கள். சடலங்களை மம்மிகள் எனப்படும் ஒரு வகையான மண் பானைகளில் வைத்துப், புதைத்து வந்தனர். எகிப்தின் மன்னர்கள் இறந்த பிறகு இவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு மம்மிகளில் பாதுகாக்கப்பட்டன. பாரோவாவின் கல்லறைகள் 481 அடி உயரம் உடையவை. இறந்தவர்களின் உடலைப் பாதுகாக்கப் பிரமிட் வடிவ கோபுரங்களும் அமைக்கப்பட்டன.

மம்மிகள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு பாலைவனக் குழிகளில் உடல்கள் புதைக்கப்பட்டுவந்தன. சடலங்கள் மம்மிகளில் வைத்துப் பாதுகாக்கப்படும் பழக்கம் உருவான பிறகும் பாலைவனங்களில் புதைக்கும் பழக்கம் மக்களிடையே தொடர்ந்தது. விரிவான சடங்குகளுடன் மம்மிகளில் புதைக்க முடியாத ஏழை மக்களுக்குப் பாலைவனம் ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்ந்தது. மிகவும் வசதி படைத்த எகிப்தியர்கள், தங்களின் உறவினர்களின் உடல்களை மம்மிகளில் வைத்து, கல்லாலான கல்லறைகளைக் கட்டினர். இதில் புதைப்பதற்கு முன் உடலின் உள்ளுறுப்புகளை எடுத்துவிட்டு, லெனின் துணியைக் கொண்டு உடலைச் சுற்றி, செவ்வக வடிவ சார்க்கோஃபோகஸ் என்கிற கற்பெட்டியில் அல்லது மரத்தாலான சவப்பெட்டிகளில் புதைத்தனர். இவற்றில் மறு உலகிற்குத் தேவையான உணவு, உடை, பிற பொருட்கள் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன. ஒருசில உறுப்புகளை மட்டும் தனியாகப் பாதுகாக்கும் பழக்கமும் ஏற்பட்டது.

மம்மிகளில் உடல்களைப் பதப்படுத்தும் தொழில்நுட்பம் மேலும் மேலும் வளர்ந்துவந்தது. மிகச் சிறந்த தரம் கொண்ட ஒரு மம்மியைப் பதப்படுத்த 70 நாட்கள் பிடித்தன. உடலின் உள்ளுறுப்புகளை நீக்குவது, மூக்கு வழியாக மூளையை வெளியே எடுப்பது, நாட்ரோன் என்ற உப்புக் கலவையில் உடலைக் கெடாமல் பாதுகாப்பது ஆகியவை பண்டைய எகிப்தியர்கள் கடைப்பிடித்த பழக்கங்களில் அடங்கும். உயிரற்ற உடல் லெனின் துணியால் பாதுகாப்பாகச் சுற்றப்பட்டு, ஒவ்வொரு மடிப்பிலும் பாதுகாப்புத் தாயத்துகள் சொருகப்பட்டன. இவை பிறகு அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டன.

அரசாட்சிகள் மாறியபோது, ரோமானிய ஆட்சியில், உடல் பாதுகாப்பைவிட அதிகமான கவனம், மம்மிகளின் வெளித் தோற்றங்களுக்கு அளிக்கப்பட்டன. இதன் விளைவாகவே மம்மிகளும் பிரமிடுகளும் அற்புதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. இந்தப் பிரமிடுகள் இன்று உலக அதிசயங்களாகப் பார்க்கப்படுகின்றன என்றால் அதற்குக் காரணம் பண்டைய எகிப்தியர்கள் அதற்குக் கொடுத்த முக்கியத்துவம்தான்.

உடல்களைப் பதப்படுத்தும் மம்மிகள்

அரசாட்சிகள் மாறியபோது, ரோமானிய ஆட்சியில், உடல் பாதுகாப்பைவிட அதிகமான கவனம், மம்மிகளின் வெளித் தோற்றங்களுக்கு அளிக்கப்பட்டன. இதன் விளைவாகவே மம்மிகளும் பிரமிடுகளும் அற்புதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x