Published : 24 Mar 2015 12:34 PM
Last Updated : 24 Mar 2015 12:34 PM
பாண்டிச்சேரி கடல்சார் கல்வி நிலையம் 2010-ல் ஆரம்பிக்கப்பட்டது. கடல்சார் தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்குவதே இதன் நோக்கம். கப்பல்களில் உள்ள ரசாயனம், கேஸ் வகை டேங்கர்களைச் சுத்தப்படுத்துவது, இயற்கை பேரிடர்களைச் சமாளிப்பது, தீத்தடுப்பு மற்றும் மீட்புப்பணிகள் தொடர்பான பயிற்சிகள் உள்ளிட்டுப் பலவகையான பட்டயப்படிப்புகள் இங்கு உள்ளன.
இவற்றின் காலம் ஆறுமாதம் முதல் இரண்டு ஆண்டுகள்.
தங்கும் வசதி உண்டு. 6 நாட்கள் பயிற்சி, 12 நாட்கள் பயிற்சி எனக் குறுகிய நாள் பயிற்சிகளும் உண்டு. பட்ட மேற்படிப்பாக எம்.பி.ஏ படிப்பும் இருக்கிறது.
கப்பல் போக்குவரத்து கழகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றிய பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
எம்.பி.ஏ. படிப்பில் சேரப் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு >http://pondicherrymaritime.com/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT