Published : 18 Mar 2015 12:43 PM
Last Updated : 18 Mar 2015 12:43 PM

நீங்களே செய்யலாம்: தேங்காய் நார்ப் பூனை

மியாவ் மியாவ் எனக் கத்திக்கொண்டே போகும் சிறிய பூனைக் குட்டிகளை உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா? அதைப் போன்ற ஒரு குட்டிப் பூனையைச் செய்வோமா?

தேவையான பொருள்கள்:

தடித்த அட்டை போன்ற காகிதம் ஒரு துண்டு, கறுப்பு, சிவப்பு ஸ்கெட்ச் பேனா, சிறிதளவு பஞ்சு, தேங்காய் நார், பசை.

செய்முறை:

1 தடித்த அட்டை காகிதத்தில், மேல் பகுதியில் ஒரு சிறு வட்டமும், கீழ்ப் பகுதியில் ஒரு பெரிய வட்டமும் படத்தில் காட்டியுள்ளதைப் போல் வரைந்துகொள்ளுங்கள். சிறிய வட்டம் பூனையின் முகம், பெரிய வட்டம் பூனையின் உடம்பு, சரியா?

2 படத்தில் காட்டியுள்ளது போல, பூனையின் கண்கள், காதுகள், வாய், வால் போன்றவற்றை வரைந்துகொள்ளுங்கள்.

3 பசை உதவியுடன் பூனையின் உடம்பு, முகம் ஆகியவற்றின் மீது பஞ்சை ஒட்டிக்கொள்ளுங்கள். கண்களையும், வாயையும் மட்டும் விட்டுவிடுங்கள்.

4 வாயின் இரு புறங்களிலும் தேங்காய் நார் மூலம் மீசையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது உங்களிடம் அழகான மிருதுவான பூனைக் குட்டி ஒன்று கிடைத்துவிட்டதா? அதை வைத்து உற்சாகமாக விளையாடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x