Last Updated : 28 Feb, 2015 11:42 AM

 

Published : 28 Feb 2015 11:42 AM
Last Updated : 28 Feb 2015 11:42 AM

கட்டிடத்தின் நோய் நீக்கும் மருந்து

எல்லாக் கட்டிடத்திற்கும் ஓர் ஆயுள் உண்டு. வயது கூடக் கூட நமக்கு உடல் கோளாறுகள் வருவதுபோல் கட்டிடத்துக்கும் நோய் ஏற்படுவது இயல்புதான். நாம் மருந்து மாத்திரை எடுத்து நமது நோயைக் குணப்படுத்துவதுபோல் கட்டிடத்துக்கும் சில மருந்துகள் கொடுத்து அதை நோயிலிருந்து மீட்கலாம்.

கட்டிடத்தில் பழுதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் செயல் திறன் இழந்து அது சரிந்து விழும் ஆபத்தும் இருக்கிறது. அதனால் நம்மைக் கவனிப்பதுபோல் கட்டிடத்தையும் நன்றாகக் கவனித்துவர வேண்டும். பலவிதமான குறைபாடுகளால் கட்டிடம் பாதிக்கப்படும். மழை, வெயில், காற்று போன்ற இயற்கைக் காரணங்களாலும் பாதிக்கப்படும்.

வீட்டின் உள்ளே தண்ணீர்க் குழாய் கழிவுகளாலும் கட்டிடம் பாதிக்கப்படும். இம்மாதிரி பாதிப்பு ஏற்படும் அதைச் சரிசெய்யப் பலவிதமான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் எஃப்ஆர்பி. இது கம்பிகள், துணிகள், தகடுகள் எனப் பல வடிவங்களில் கிடைக்கிறது. எஃப்ஆர்பி என்பது Fiber Reinforced Polymers.

இவற்றைக் கொண்டு செங்கல் கட்டிடங்களை வலுவூட்டலாம். இதில் பழுதடைந்த கட்டிடத்தில் எஃப்ஆர்பி கம்பிகளைச் செலுத்தி எபாக்ஸி (Epoxy) கொண்டு சமமாகப் பூச வேண்டும். மேலும் எஃப்ஆர்பி துணிகளைச் செங்கள் கட்டிடத்தின் மீது ஒட்டுவதாலும் வலு கிடைக்கும்.

துணியை வெளிப்புறம் உட்புறமும் சமமாக ஒட்ட வேண்டும். மேலும் கான்கிரீட் தூண்களை எஃப்ஆர்பி தகடுகளைக் கொண்டு நாற்புறமும் ஒட்டி வலுவூட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x