Published : 24 Feb 2015 12:13 PM
Last Updated : 24 Feb 2015 12:13 PM
இந்திய விமானப் படை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட 140 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:
குறைந்தபட்ச வயது 18 உச்சபட்ச வயது 27. அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் சலுகை உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் >http://goo.gl/mCBTTQ என்னும் இணைய ஆவணத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு மார்ச் 14 அன்றோ அதற்கு முன்னதாகவோ அனுப்ப வேண்டும்.
கடைசி நாள்: 14.03.2015
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT