Last Updated : 05 Aug, 2017 10:38 AM

 

Published : 05 Aug 2017 10:38 AM
Last Updated : 05 Aug 2017 10:38 AM

அறைக்கலன்களைத் தேர்வு செய்வது எப்படி?

சொ

ந்தமாக வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் செய்து குடிபுகும் பலரும் புதிய ஃபர்னிச்சர்களை (அறைக்கலன்கள்) வாங்கி வீட்டை அழகாகக் காட்ட விரும்புவார்கள். ஆனால், அறைக்கலன்களை கச்சிதமாகத் தேர்வு செய்வதில் கோட்டை விட்டுவிடுவார்கள். இன்றைய நாகரிக உலகில் வீட்டை அலங்கரிக்கும் விஷயங்களில் ஒன்றாக ஃபர்னிச்சர்கள் திகழ்கின்றன. எனவே, அவற்றைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனத்துடன், நமது பொருளாதாரத் தேவைக்கேற்ப பட்ஜெட்டுக்குள் அவற்றை வாங்க வேண்டியதும் அவசியம்.

ஃபர்னிச்சர் வாங்குவதற்குச் செல்லும்போது சில விஷயங்களை முன்னதாகவே தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அதாவது, பட்ஜெட், அளவு, நிறம், தரம், வடிவம், தேவை ஆகியவற்றை முன்கூட்டியே முடிவுசெய்துகொள்ள வேண்டும். விலையைப் பொறுத்து ஃபர்னிச்சர்களை மரத்தில் வாங்குவதா உலோகத்தில் வாங்குவதா எனத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இன்றைய சூழலில், ஃபர்னிச்சர்களுக்கென்றே பிரத்தியேகமாகக் கடைகள் சந்தையில் உள்ளன. அங்கு சென்று வாங்குவது, நமக்கு பணத்தை மிச்சப்படுத்தும் என்று நினைப்பவர்கள் உண்டு.

ஆனால், கடையின் பிரம்மாண்டத்துக்கு முன்பு, அங்கு வைக்கப்பட்டுள்ள ஃபர்னிச்சர்கள், பார்ப்பவர்களுக்குச் சிறிதாகத் தோன்றக் கூடும். ஆனால், வீட்டின் அளவைக் கொண்டு பார்க்கும்போது அவை போதுமானதாக இருக்கும் என்பதை ஃபர்னிச்சர்கள் வாங்குபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

shutterstock_547458577

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், ஃபர்னிச்சர்கள், அறையின் நீள, அகலத்துக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். விலை மலிவாக கிடைத்தாலும் பெரிய அளவிலான சோபா அல்லது இருக்கைகளை வாங்க முன்வரக் கூடாது. ஏனென்றால், அவை அறையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளும். பயன்பாட்டுக்கான இடம் வெகுவாக குறைந்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதேபோல், கட்டில் வாங்குவதிலும் கூடுதல் கவனம் தேவை. எத்தனை பேருக்காக அதை வாங்குகிறீர்கள் என்பதையும், எந்த அறையில் அதை உபயோகப்படுத்தத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் கருத்தில் கொண்டே அதன் அளவை முடிவு செய்ய வேண்டும். சிறு குழந்தைகள் உள்ள வீட்டுக்குக் கட்டில், நாற்காலி போன்றவற்றை வாங்கும்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், குழந்தைகள் கத்தி, ஊசி போன்ற பொருட்களைக் கொண்டு கட்டிலையோ நாற்காலியையோ சேதப்படுத்தக் கூடும் என்பதால், அதிக விலை கொடுத்தோ தோல் பொருட்களில் செய்யப்பட்ட இருக்கைகளையோ வாங்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துக்கொள்ள வேண்டும். சோபா செட்களை வாங்கும்போது, கண்ணைப் பறிக்கும் நிறத்தில் இருக்கிறது என்பதற்காகவோ பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பதற்காகவே அவற்றை வாங்குவதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவது இல்லை. அறையின் வண்ணம், அறையின் இடத்தை நினைவில் கொண்டு வாங்குங்கள்.

இந்த விஷயங்களுடன், ஃபர்னிச்சர்களின் ஆயுள் காலத்தையும் கவனத்தில் கொள்வதும் அவசியம். பொதுவாக நீண்ட காலம் உழைக்கக்கூடிய ஃபர்னிச்சர்களை வாங்குவது பணத்தை மிச்சப்படுத்தும். அதிலும், பராமரிக்கக் கூடுதல் செலவாகாத வகையில் உள்ள ஃபர்னிச்சகளை வாங்குவதே சிறந்தது. விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக, தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x