Published : 13 Aug 2017 01:25 PM
Last Updated : 13 Aug 2017 01:25 PM
ஏலக்காய், சுக்கு இரண்டையும் அரைத்து நீர்விட்டுக் கொதிக்கவைத்துப் பருகினால் வறட்டு இருமல் குறையும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் ஆசனவாய் தொடர்பான கோளாறுகள் நீங்கிவிடும்.
பலாப்பழத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி உற்சாகம் பெருகும்.
சீரகம், திப்பிலியைப் பொடித்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் நீங்கிவிடும்.
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வயிற்றுவலி, வாயு தொல்லை போன்றவை நீங்கிவிடும்.
- அசநா, நெல்லை.
சிறிதளவு கொள்ளுப் பயறை வாசனை வரும்வரை வறுத்து ஒரு டம்ளர் நீரில் ஊறவையுங்கள். மறுநாள் காலையில் வடிகட்டி அந்த நீரில் சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் குடித்தால் மாதவிடாயின் போது வரும் வயிற்று வலி நீங்கும்.
அரை லிட்டர் நீரில் ஒரு பிடி பார்லி அரிசி போட்டு நன்றாகக் கொதிக்கவையுங்கள். அதை இறக்கி உப்பும் எலுமிச்சைச் சாறும் கலந்து குடித்தால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தி, மயக்கம் தீரும்.
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை துளசி இலையைச் சாப்பிட்டுவந்தால் தொற்றுநோய் வராது.
தயிரைத் தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டுப் பின் சீயக்காய்த் தூள் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
- சி.செல்வராஜ், திருவாரூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT