Last Updated : 13 Aug, 2017 01:45 PM

 

Published : 13 Aug 2017 01:45 PM
Last Updated : 13 Aug 2017 01:45 PM

சேனல் சிப்ஸ்: அடுத்த காதல் ‘ஹிட்’

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மாப்பிள்ளை’ தொடரில் ரம்யா - ஜீவா காதல் ஜோடிகளின் டிராக் சுவாரஸ்யத்தோடு அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.‘‘சரவணன்-மீனாட்சி தொடரில் எப்படி தமிழ் – சவுந்தர்யா டிராக் பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதேமாதிரிதான் இப்போது ‘மாப்பிள்ளை’ தொடர்ல ரம்யா – ஜீவா காதல் டிராக் அமைந்திருக்கிறது.

என்னைவிட சின்னப் பையனாக இருக்கும் ஜீவா, என்னைக் காதலிப்பதுபோல் அமைந்துள்ள இந்த சீரியல் புதுமையான, அழகான காதல் பின்னணியில் நகர்வதால் பார்வையாளர்கள் மத்தியில் ‘டிரெண்டியா இருக்கே’ன்னு ஒரு இடத்தை பிடித்துவிட்டது.

அதுக்கு விஜய் தொலைக்காட்சிக்கும் எங்க சீரியல் குழுவுக்கும்தான் நன்றி சொல்லணும். எப்போதும் புதுமைதான் நல்ல ஒரு அடையாளத்தை தேடிக் கொடுக்கும். அந்த மாதிரி அமைந்த சீரியல் இது. அதேபோல பாலா சார் இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளேன். அதோட ரிலீஸுக்காகக் காத்திருக்கிறேன்!’’ என்கிறார் ரம்யா.

ஊரு விட்டு ஊரு

பெப்பர்ஸ் தொலைக்காட்சி, வசந்த் தொலைக்காட்சி என்று வட்டமடித்து வந்த சின்னத்திரை தொகுப்பாளினி காயத்ரி, கடந்த 3 மாதங்களாக மும்பை ஹாப் சிஜே தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக அசத்தியிருக்கிறார்.

‘‘புது இடம், புது மாதிரியான வேலை அனுபவமா இருக்கட்டுமே என்று 3 மாதங்களாக மும்பை சேனலில் வேலை பார்த்தேன். ஷாப் சிஜே சேனல், முழுக்க ஷாப்பிங் குறித்த தகவல்களைத் தரும் தொலைக்காட்சி. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என்று மூன்று மொழிகளில் ஒளிபரப்பாகிறது. நான் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கினேன்.

அங்கே அவர்கள் வேலை செய்யும் விதம், டெக்னீஷியன்களின் ஸ்டைல் எல்லாமே வித்தியாசமா இருக்கிறது. விதவிதமான நேரடி நிகழ்ச்சிகளை வழங்கினேன். வீட்டில் அம்மா, ‘பார்க்கணும்போல இருக்கு?’ன்னு போன் பண்ணினாங்க. உடனே ஓடி வந்தாச்சு. இங்கே வந்ததும் மீண்டும் வசந்த் தொலைக்காட்சியில்’ ‘மண் பேசும் சரித்திரம்’ நிகழ்ச்சியை கையில் எடுத்துவிட்டேன். என்னதான் இருந்தாலும் நம்ம ஊரில் நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஒரு தனி இனிமை இருக்கவே செய்கிறது’’ என்கிறார், காயத்ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x