Published : 17 Jul 2017 10:30 AM
Last Updated : 17 Jul 2017 10:30 AM
இந்த நூற்றாண்டை நாம் டிஜிட்டல் நூற்றாண்டு என்று பெருமையுடன் கூறிக் கொள்ளலாம். உலகம் முழுவதும் டிஜிட்டலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக நிதித்துறையில் டிஜிட்டலின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. வங்கிக்கு செல்லாமல் அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலமாக நம்மால் இன்று மேற்கொள்ளமுடிகிறது. டிஜிட்டல் மயம் குறியீடு கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. இதில் நார்வே முதலிடத்தில் உள்ளது. 17-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் நகர்புறத்தில் டிஜிட்டல் மயத்தின் வேகம் உயர்ந்து வருகிறது. இதை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான வேலைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT