Published : 10 Sep 2016 01:00 PM
Last Updated : 10 Sep 2016 01:00 PM

அதிகாரப் பத்திரத்தில் எத்தனை வகை?

நீண்ட பரப்பிலான இடம் மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்படுவதும், பரந்த தளத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்கப்படுவதும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியால் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இம்மாதிரியான விற்பனைப் பரிவர்த்தனையில் நிலத்தின் உரிமையாளர் ஒருவராக இருப்பார். ஆனால் அந்த நிலத்தை நிர்வகிக்க வேறு ஒருவருக்கு, அதாவது கட்டுநருக்கோ மனை விற்பனையாளருக்கோ பவர் பத்திரம் எழுதிகொடுப்பார்.

ரியல் எஸ்டேட் வளர்ச்சியைத் தொடர்ந்து இந்த அதிகாரப் பத்திரம் எழுதுவது அதிகரித்தது. அதுபோல அதிகாரப் பத்திரம் என்ற பெயரில் மோசடிகளும் அதிகரித்தன. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் பல கிடுக்குப் பிடிகளைச் சட்டப் பிரிவாகச் சேர்த்தன. அதாவது மேற்படி அதிகாரப் பத்திரம் அளிப்பவர் உயிருடன் இருந்தால்தான் பத்திரம் செல்லுபடியாகும் எனச் சொன்னது. மேலும் முக்கியமான வழக்கொன்றில் உச்சநீதி மன்றம் பொது அதிகார பத்திரம் (General Power of Attorney- GPA) மூலம் நிலப்பதிவை அனுமதிக்கக் கூடாது எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தகுந்தது.

நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தை நிர்வகிப்பதற்கான, விற்பதற்கான அதிகாரத்தை ஒருவருக்கு வழங்கி சார்பதிவாளர் அலுவலகத்தில் (Sub-Registration Office) அதிகாரப் பத்திரம் (Power of Attorney) பதிவுசெய்ய வேண்டும். இம்மாதிரியான பவர் பத்திரம் எழுதிக்கொடுப்பதில் பல வகை இருக்கின்றன. நிர்வகிக்க மட்டுமல்லாது அந்த நிலத்தின் விற்பனை உரிமையையும் பவர் பத்திரம் மூலம் ஒருவருக்கு எழுதிக்கொடுக்க முடியும்.

பொது அதிகார பத்திரம் (General Power of Attorney- GPA)

இந்த வகை பவர் பத்திரம் மூலம் அதிகாரம் பெறும் நபருக்கு வீடு போன்ற சொத்தை விற்க, நிலமாக இருந்தால் மனைகளாகப் பிரிக்க அதிகாரம் கிடைக்கும். மேலும் அரசு அலுவலகங்களில் சொத்து தொடர்பான ஆவணங்களில் கையொப்பம் இடவும் முடியும்.

தனி அதிகார பத்திரம் (Special Power of Attorney- SPA)

இம்மாதிரியான பவர் பத்திரம் அளிக்கப்படும் நபருக்குக் குறிப்பிட்ட அதிகாரம் மட்டும் அளிக்கப்படும். அதாவது சொத்தை விற்பதற்கு அல்லது மனைகளாகப் பிரிப்பதற்கு எனச் சில அதிகாரம் மட்டும் கிட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x